January 25, 2017

போலீஸ் ஸ்டோரி

2001 - Iron Lady அம்மையார் ஆட்சிக்கு வந்த உடனே கலைஞர் கைது படலம் நடந்தது. அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமா திரு. ஸ்டாலின் தலைமையில பேரணி நடந்தது. தேனாம்பேட்டைல தொடங்கின பேரணி கடற்கரையை அடைஞ்சதும் நடந்த போலீஸ் வன்முறை இப்போ போராளிகளா இருக்குற எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்குன்னு தெரியல. அந்த அடிதடிக்கு முன்னாடி இப்போ நடந்தது ஒண்ணுமே இல்ல. தினமலர், தினகரன், ஹிந்து, நக்கீரன் ஆண், பெண் பாரபட்சம் இல்லாம எல்லாரையும் போட்டு சாத்தி  எடுத்து போலீஸ். ஒரு 10 பேர் இறந்தும் போனாங்க. அவங்களோட சடலம் காமராஜர் சாலைல எத்தனை மணி நேரம் கேட்பாரற்று கிடந்துதுனு யாரையாவது கேட்டு தெரிஞ்சுக்கோங்க. இந்த அதிர்ச்சில சைதாப்பேட்டை MLA  வை.பெருமாள் மாரடைப்புல இறந்து போய் அந்த இடத்துல நடிகர் ராதா ரவி  MLA   ஆனார். தி.மு.க. MP வெற்றிச்செல்வன் பாராளுமன்றத்துல சட்டையை கழட்டி நீங்க அடிக்காத காட்டின வரலாறு நீங்க மறக்கலாம், நாங்க மறக்க மாட்டோம். இந்த அடிதடிக்கு Project Manager வேல பாத்தது போலீஸ் நண்பன் அயோத்திகுப்பம் வீரமணி. பிற்பாடு ஒரு 6 மாசத்துல என்கவுண்டர்ல போட்டு தள்ளுற அளவுக்கு  போலீஸ் எதிரி ஆயிட்டாரு. இந்த போராட்டது முன் நின்று  நடத்துனது  திரு. முத்துக்கருப்பனும், திரு. முகமது அலியும் என்ன ஆனாங்க. ``என்ன ரொம்ப நாலா Waiting List ல வெச்சு பெஞ்ச தேய்க்க விடறாங்கன்னு`` முத்துக்கருப்பன் கலைஞர் கிட்ட தான் வந்து முறையிட்டார்..

2002 -  புரசைவாக்கம் மோட்சம் திரை அரங்குக்கு பக்கத்துல இருக்குற கணேஷ் மெஸ்ல எதிர்க்க இருக்குற சட்ட கல்லூரி விடுதி மாணவர்கள் தகராறு பண்ணாங்கன்னு சொல்லி நடுராத்திரி உள்ள புகுந்து அடிச்ச அடி, அத வாங்கின ஒருத்தரும் அத மறந்துருக்க மாட்டாங்க. அதன் தொடர்ச்சியா, போராட்டம் பண்ண மேலூர் & சேலம் சட்ட கல்லூரி மாணவர்களையும்  இந்த போலீஸ் என்ன பண்ணுச்சுனு சொல்லி தெரிய வேண்டியதில்லை. சென்னை பொது மருத்துவமனையில அடிவாங்கின  மாணவர்களை பாக்க  போன மாணவர்களையும் எப்படி அடிச்சாங்கன்னு நானே சொல்லுவேன். ஏன்னா  நான் அப்போ நந்தனம் கல்லூரி மாணவன், நானும் லத்தில அப்போ அடி வாங்கினேன்..நந்தனம் கல்லூரிக்கும் போலீசுக்கும் இருக்குற நட்பு மார்க் அந்தோணிக்கும் மாணிக் பாஷாவுக்கு இருக்க கூடிய அளவுக்கு உயிர் நட்பு. எங்க காலேஜ் உள்ள இருக்கு மோட்டார் ரூம் உடைச்சு எங்க மேலயே பழியை போடற அளவுக்கு  நியாயவானுங்க.

இது போக டாஸ்மாக் விவகாரத்துல கல்லூரி மாணவர்களை அடிச்சது, கோவன் கைது, சசி பெருமாள் கைது, பரமக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தி 7 பேர கொன்னது, இதுக்கெல்லாம் மேல கண்பார்வை அற்ற மாற்று திறனாளிகளை அடிச்சு ஊருக்கு  வெளில கொண்டு போய்  விட்டுட்டு வர அளவுக்கு புண்ணியவானுங்க சார் இவங்க. கூடன்குளத்துக்காக போராடின இடிந்தகரை சாதாரண மக்கள் இப்போ வரைக்கும் கோர்ட், கேஸ்னு சுத்துறது எத்தனை பேருக்கு தெரியும்..வெள்ளம் வந்தப்போ அவங்க வேல பொழைப்பையெல்லாம் விட்டுட்டு படகு எடுத்துட்டு வந்து காப்பாத்துனாங்களே அதுக்கு நீங்க காட்டுற நன்றி கடனாடா இது படுபாவிங்களா.

இது போக 20 கிலோ மீன திருடிட்டு பொய் பக்கத்துல இருக்குற லேடி வெல்லிங்டன் ஸ்கூல்ல வெச்சு சமைச்சு சாப்ட்ருக்கீங்க. கொஞ்சம் மாசத்துக்கு முன்னாடி போன் கடைல புகுந்து திருடுன கும்பலுக்கும், பிரியாணி அண்டா திருடுன திருட்டு பசங்களுக்கும் உங்களுக்கு என்ன வித்யாசம்.. கேட்டா தி.மு.க. காரனுங்க போலீஸ் வேஷத்துல வந்து இதையெல்லாம் செஞ்சுட்டாங்கன்னு சால்ஜாப்பு வேற..அப்படி வேஷம் போட்டு வந்தவங்கள  கண்டுபிடிக்க துப்பு இல்லாதவங்களா நீங்க..

இந்த  ஆதி,  பாலாஜி, சீமான், கௌதமன், திருமுருகன் காந்தி எல்லாரையும் கவர் பண்ண News 7, புதிய தலைமுறை குப்பத்து ஜனங்களை அடிக்கிறப்போ எங்க போனாங்க. எனக்கு தெரிஞ்சு இவங்கள ஒருத்தன் கூட இதுக்கு சின்னதா ஒரு முனகல்  சத்தம் கூட வெளில விடலியே..

தீய சக்திகள் உள்ள புகுந்ததால் நாங்க வெளில போனோம் சொல்றீங்களே ஆதி அந்த தீய சக்தி யாரு. மோடியை திட்டினாங்க சசிகலாவை திட்டினாங்கன்னு சொல்றீங்களே..இவங்க 2 பெரும் முன்னாடி என்ன பண்ணாங்க, இப்போ மக்களை என்ன பண்ண போறாங்கன்னு தெரியாத தற்குறி கூட்டமா அங்க கூடி இருந்துது, இல்ல அது தெரியாம தான் நீங்க இவ்ளோ நாள் அந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினீங்களா..Demonetization ``Dont  Panic `` புகழ் பாலாஜியை பத்தி சொல்லவே வேணாம். அரசியல்வாதீங்க வேண்டவே வேண்டாம் சொல்லிட்டு இப்போ எங்களுக்கு புரியல தெரியல அரசியவாதிங்க எங்கள   வழி நடத்துங்க சொல்றது எந்த மாதிரியான அறிவாளித்தனம்...

சுமார் ஒரு 25 வருஷத்துக்கு முன்னால திருவல்லிகேணில விநாயகர் ஊர்வலத்துல கலாட்டா பண்ணாங்கன்னு சொல்லி, அடுத்து வந்த மீலாது நபி விழாவுல முஸ்லீம் சகோதரர்களை என்ன பண்ணாங்கன்னு, இப்போ எரிஞ்சுதுன்னு சொன்னாங்களே ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன், அங்க முன்னாடி இருந்தவங்கள கேளுங்க, மனசாட்சி இருந்தா உண்மைய சொல்லுவாங்க. 

அய்யா குப்பத்து சகோதரர்களே, போராட்டம் சொல்லிட்டு எவன் வந்தாலும் உதவி பண்ணாதீங்க, வெள்ளம் வந்து ஊர் அடிச்சிட்டு போனாலும் பரவால்ல உங்க வேலையெல்லாம் விட்டுட எங்களுக்கு உதாவாதீங்க. அப்புற எப்பவும் போல உங்க ஆட்டோவை எரிப்பாங்க , குடிசையை கொளுத்துவாங்க, மீன திருடுவாங்க, அப்புறம் நிறைய   அடிப்பாங்க.. முன்னாடி நடந்தது போல நீங்க தான் மாட்டிட்டு முழிக்கணும்.

இதெல்லாம் சொல்ல நீ யாருடன்னு நீங்க கேக்கலாம். கம்யூனிஸ்ட்டா, சமூக போராளியா  இல்ல Facebook போராளியான்னு கேக்கலாம். இதுல எதுவும் இல்ல. அந்த ஐஸ் போலீஸ் ஸ்டேஷன் இருக்குல்ல அங்க இருந்து ஒரு 150 ஆடி  தள்ளி தான் நான் பொறந்து 15 வருஷம் வளர்ந்த  வீடு இருக்கு (இருந்துது) இந்த நடு குப்பம் நான் இருந்த வீட்ல இருந்து ஒரு 5 நிமிஷம் நடைதான். அவங்க கஷ்டம் எனக்கு தெரியும், அது அந்த ஊர் பாசம் மட்டும் தான்...

January 25, 2017

போலீஸ் ஸ்டோரி

2001 - Iron Lady அம்மையார் ஆட்சிக்கு வந்த உடனே கலைஞர் கைது படலம் நடந்தது. அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமா திரு. ஸ்டாலின் தலைமையில பேரணி நடந்தது. தேனாம்பேட்டைல தொடங்கின பேரணி கடற்கரையை அடைஞ்சதும் நடந்த போலீஸ் வன்முறை இப்போ போராளிகளா இருக்குற எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்குன்னு தெரியல. அந்த அடிதடிக்கு முன்னாடி இப்போ நடந்தது ஒண்ணுமே இல்ல. தினமலர், தினகரன், ஹிந்து, நக்கீரன் ஆண், பெண் பாரபட்சம் இல்லாம எல்லாரையும் போட்டு சாத்தி  எடுத்து போலீஸ். ஒரு 10 பேர் இறந்தும் போனாங்க. அவங்களோட சடலம் காமராஜர் சாலைல எத்தனை மணி நேரம் கேட்பாரற்று கிடந்துதுனு யாரையாவது கேட்டு தெரிஞ்சுக்கோங்க. இந்த அதிர்ச்சில சைதாப்பேட்டை MLA  வை.பெருமாள் மாரடைப்புல இறந்து போய் அந்த இடத்துல நடிகர் ராதா ரவி  MLA   ஆனார். தி.மு.க. MP வெற்றிச்செல்வன் பாராளுமன்றத்துல சட்டையை கழட்டி நீங்க அடிக்காத காட்டின வரலாறு நீங்க மறக்கலாம், நாங்க மறக்க மாட்டோம். இந்த அடிதடிக்கு Project Manager வேல பாத்தது போலீஸ் நண்பன் அயோத்திகுப்பம் வீரமணி. பிற்பாடு ஒரு 6 மாசத்துல என்கவுண்டர்ல போட்டு தள்ளுற அளவுக்கு  போலீஸ் எதிரி ஆயிட்டாரு. இந்த போராட்டது முன் நின்று  நடத்துனது  திரு. முத்துக்கருப்பனும், திரு. முகமது அலியும் என்ன ஆனாங்க. ``என்ன ரொம்ப நாலா Waiting List ல வெச்சு பெஞ்ச தேய்க்க விடறாங்கன்னு`` முத்துக்கருப்பன் கலைஞர் கிட்ட தான் வந்து முறையிட்டார்..

2002 -  புரசைவாக்கம் மோட்சம் திரை அரங்குக்கு பக்கத்துல இருக்குற கணேஷ் மெஸ்ல எதிர்க்க இருக்குற சட்ட கல்லூரி விடுதி மாணவர்கள் தகராறு பண்ணாங்கன்னு சொல்லி நடுராத்திரி உள்ள புகுந்து அடிச்ச அடி, அத வாங்கின ஒருத்தரும் அத மறந்துருக்க மாட்டாங்க. அதன் தொடர்ச்சியா, போராட்டம் பண்ண மேலூர் & சேலம் சட்ட கல்லூரி மாணவர்களையும்  இந்த போலீஸ் என்ன பண்ணுச்சுனு சொல்லி தெரிய வேண்டியதில்லை. சென்னை பொது மருத்துவமனையில அடிவாங்கின  மாணவர்களை பாக்க  போன மாணவர்களையும் எப்படி அடிச்சாங்கன்னு நானே சொல்லுவேன். ஏன்னா  நான் அப்போ நந்தனம் கல்லூரி மாணவன், நானும் லத்தில அப்போ அடி வாங்கினேன்..நந்தனம் கல்லூரிக்கும் போலீசுக்கும் இருக்குற நட்பு மார்க் அந்தோணிக்கும் மாணிக் பாஷாவுக்கு இருக்க கூடிய அளவுக்கு உயிர் நட்பு. எங்க காலேஜ் உள்ள இருக்கு மோட்டார் ரூம் உடைச்சு எங்க மேலயே பழியை போடற அளவுக்கு  நியாயவானுங்க.

இது போக டாஸ்மாக் விவகாரத்துல கல்லூரி மாணவர்களை அடிச்சது, கோவன் கைது, சசி பெருமாள் கைது, பரமக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தி 7 பேர கொன்னது, இதுக்கெல்லாம் மேல கண்பார்வை அற்ற மாற்று திறனாளிகளை அடிச்சு ஊருக்கு  வெளில கொண்டு போய்  விட்டுட்டு வர அளவுக்கு புண்ணியவானுங்க சார் இவங்க. கூடன்குளத்துக்காக போராடின இடிந்தகரை சாதாரண மக்கள் இப்போ வரைக்கும் கோர்ட், கேஸ்னு சுத்துறது எத்தனை பேருக்கு தெரியும்..வெள்ளம் வந்தப்போ அவங்க வேல பொழைப்பையெல்லாம் விட்டுட்டு படகு எடுத்துட்டு வந்து காப்பாத்துனாங்களே அதுக்கு நீங்க காட்டுற நன்றி கடனாடா இது படுபாவிங்களா.

இது போக 20 கிலோ மீன திருடிட்டு பொய் பக்கத்துல இருக்குற லேடி வெல்லிங்டன் ஸ்கூல்ல வெச்சு சமைச்சு சாப்ட்ருக்கீங்க. கொஞ்சம் மாசத்துக்கு முன்னாடி போன் கடைல புகுந்து திருடுன கும்பலுக்கும், பிரியாணி அண்டா திருடுன திருட்டு பசங்களுக்கும் உங்களுக்கு என்ன வித்யாசம்.. கேட்டா தி.மு.க. காரனுங்க போலீஸ் வேஷத்துல வந்து இதையெல்லாம் செஞ்சுட்டாங்கன்னு சால்ஜாப்பு வேற..அப்படி வேஷம் போட்டு வந்தவங்கள  கண்டுபிடிக்க துப்பு இல்லாதவங்களா நீங்க..

இந்த  ஆதி,  பாலாஜி, சீமான், கௌதமன், திருமுருகன் காந்தி எல்லாரையும் கவர் பண்ண News 7, புதிய தலைமுறை குப்பத்து ஜனங்களை அடிக்கிறப்போ எங்க போனாங்க. எனக்கு தெரிஞ்சு இவங்கள ஒருத்தன் கூட இதுக்கு சின்னதா ஒரு முனகல்  சத்தம் கூட வெளில விடலியே..

தீய சக்திகள் உள்ள புகுந்ததால் நாங்க வெளில போனோம் சொல்றீங்களே ஆதி அந்த தீய சக்தி யாரு. மோடியை திட்டினாங்க சசிகலாவை திட்டினாங்கன்னு சொல்றீங்களே..இவங்க 2 பெரும் முன்னாடி என்ன பண்ணாங்க, இப்போ மக்களை என்ன பண்ண போறாங்கன்னு தெரியாத தற்குறி கூட்டமா அங்க கூடி இருந்துது, இல்ல அது தெரியாம தான் நீங்க இவ்ளோ நாள் அந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினீங்களா..Demonetization ``Dont  Panic `` புகழ் பாலாஜியை பத்தி சொல்லவே வேணாம். அரசியல்வாதீங்க வேண்டவே வேண்டாம் சொல்லிட்டு இப்போ எங்களுக்கு புரியல தெரியல அரசியவாதிங்க எங்கள   வழி நடத்துங்க சொல்றது எந்த மாதிரியான அறிவாளித்தனம்...

சுமார் ஒரு 25 வருஷத்துக்கு முன்னால திருவல்லிகேணில விநாயகர் ஊர்வலத்துல கலாட்டா பண்ணாங்கன்னு சொல்லி, அடுத்து வந்த மீலாது நபி விழாவுல முஸ்லீம் சகோதரர்களை என்ன பண்ணாங்கன்னு, இப்போ எரிஞ்சுதுன்னு சொன்னாங்களே ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன், அங்க முன்னாடி இருந்தவங்கள கேளுங்க, மனசாட்சி இருந்தா உண்மைய சொல்லுவாங்க. 

அய்யா குப்பத்து சகோதரர்களே, போராட்டம் சொல்லிட்டு எவன் வந்தாலும் உதவி பண்ணாதீங்க, வெள்ளம் வந்து ஊர் அடிச்சிட்டு போனாலும் பரவால்ல உங்க வேலையெல்லாம் விட்டுட எங்களுக்கு உதாவாதீங்க. அப்புற எப்பவும் போல உங்க ஆட்டோவை எரிப்பாங்க , குடிசையை கொளுத்துவாங்க, மீன திருடுவாங்க, அப்புறம் நிறைய   அடிப்பாங்க.. முன்னாடி நடந்தது போல நீங்க தான் மாட்டிட்டு முழிக்கணும்.

இதெல்லாம் சொல்ல நீ யாருடன்னு நீங்க கேக்கலாம். கம்யூனிஸ்ட்டா, சமூக போராளியா  இல்ல Facebook போராளியான்னு கேக்கலாம். இதுல எதுவும் இல்ல. அந்த ஐஸ் போலீஸ் ஸ்டேஷன் இருக்குல்ல அங்க இருந்து ஒரு 150 ஆடி  தள்ளி தான் நான் பொறந்து 15 வருஷம் வளர்ந்த  வீடு இருக்கு (இருந்துது) இந்த நடு குப்பம் நான் இருந்த வீட்ல இருந்து ஒரு 5 நிமிஷம் நடைதான். அவங்க கஷ்டம் எனக்கு தெரியும், அது அந்த ஊர் பாசம் மட்டும் தான்...