July 28, 2016

நானும் சேட்ஜிதான்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

நம்ம ஹரித்வார் புலவர் திருவள்ளுவர் எல்லா உயிரும் சமம், அவனவன் செய்ற வேலைல தான் விஷயமே இருக்குனு சொல்லிருக்காரு. இதெல்லாம் புரியாம 2 பேரா போய் ஒரு உலக மஹா மொக்க வாங்கின கதை தான் இது..

முன்னொரு காலத்துல காலேஜ் படிச்சு முடிச்சு வெட்டியா ஊர் சுத்திட்டு இருந்தப்போ நடந்தது இது. நான் இருந்த ஏரியாவுல பாலாஜி மஹால்னு ஒரு பிரம்மாண்டமான கல்யாண மண்டபம் இருந்துது..ஏரியாவுல இருக்குற அரசியல்வாதிங்க, பெரிய தலைங்க வீட்டு கல்யாணமெல்லாம் அங்க தான் நடக்கும், அது ஒரு பணக்கார ஸ்பாட் அப்படின்னு எங்க மனசுக்குள்ள நாங்களே பிக்ஸ் பண்ணிக்கிட்டு அந்த கல்யாண மண்டபத்துல நடக்குற கல்யாணத்த ஆஆன்னு வாய பொளந்துட்டு பாப்போம்..

இந்த ஹோலி இருக்குல்ல அப்போ எங்க ஏரியாவுல இருக்குற சேட் ஜீ எல்லாம் இந்த மண்டபத்தை புக் பண்ணி இந்த தாண்டிய டான்ஸ் ஆடுவாங்க. அது மூணு இல்லனா நாலு நாளைக்கு நடக்கும். இந்த தாண்டியா  டான்ஸ் குஜராத்தி ஆளுங்க ஆடுவாங்க, பொதுவா ஹோலி நேரத்துல கிருஷ்ணா லீலா காணசப்ட்ல ஆடுவாங்க. இங்க ஹைதராபாத்ல துர்கா பூஜையப்போ நடக்குது.

விஷயத்துக்கு,வருவோம், நம்ம ஏரியாவுல சேட்டு பொண்ணுங்க கலர் காலரா டிரஸ் போட்டுட்டு உலா வருவதை பாத்தா உடனே தான் பட்டாம்பூச்சி பறக்கும், மணி அடிக்கும், பல்பு எரியும், உள்ளுக்குள்ள உருண்டை எல்லாம் உருளுமே. அந்த டான்ஸ்ல நாம எப்படி உள்ள போய் அவங்களோட ஜாயின் பண்றது அப்படின்னு நானும் என்னோட உயிர் தோழர் சுரேஷும் ஆலசோனை செஞ்சோம்..உடனடியா நல்லா குளிச்சு முடிச்சு, மூஞ்சையெல்லாம் நல்லா கழுவி ஒரு 5 ரூபா Fair & Lovely (தங்கச்சிது தான், அப்போ மென்ஸ் கிரீம் வரல) எடுத்து மூஞ்சு மொத்தமும் பூசி ஒரு ஆதி காலத்து பைஜாமா ஜிப்பா எடுத்து மாட்டிட்டு சேட்ஜி மாதிரியே சைக்கிள்ல அந்த மண்டபத்துக்கு போனோம்..

சைக்கிள் மண்டபத்துக்கு கொஞ்சம் முன்னாடியே ரோட்ல நிறுத்திட்டோம். பொண்ணுங்க பாத்து கேவலமா நெனைக்க போகுதுன்னு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. நேரா உள்ள போக பாத்தோம்.அப்போ ஒரு கை  எங்களை தடுத்து நிறுத்திச்சு,  " தம்பிங்களா எங்க போறீங்க" அப்படின்னு நின்னுட்டு இருந்த செக்யூரிட்டி எங்களை கேட்டாரு, நான் ரொம்ப அப்பாவியா  "டான்ஸ் ஆட" அப்படின்னு சொன்னேன். "தம்பி இது பெரிய இடத்து பசங்க அவங்க பண்டிகையை கொண்டாட வந்துருக்காங்க, நீங்க எங்க போறீங்க மாப்ள மாதிரி" அப்படின்னாரு..பெரிய இடது பசங்க அப்படின்ற வார்த்தையை கேட்ட உடனே கோபம் தலைக்கேறுச்சு, ஒன்னும் பண்ண முடியாதே, உள்ள போக முடியாம போச்சுன்னா..சமாளிக்கலாம்னு சொல்லி.."பாய் சாப் மெய்ன் பி ஹிந்தி வாலா  ஹூன், ஓ மேரா தோஸ்த் ஹை, மெய்ன் அந்தர் ஜானா ஹை," அப்படின்னு ஹிந்தில நான் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி பாத்தேன். ஒன்னும் நடக்கல, இதுக்கு நடுவுல உள்ள இருந்த சூப் பாய்ஸ் அண்ட் சூப்பர் கேர்ள்ஸ் எங்க நாங்க உள்ள வந்துருவோமோனு பயத்துலயே எங்களை பாத்துட்டு இருந்தாங்க.."போங்க போங்க ஆள பாத்தா தெரியாதா....சேட்டு பசங்கன்னு பொய் சொல்லி டப்பா ஹிந்தில பேசினா நாங்க ஏமாந்துருவோமா., போ போ ('ங்க' கட் ஆயிருச்சு)" அப்படின்னு எங்களை கழுத்த  புடிச்சு வெளில தள்ளாம வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா  அப்படின்னு டீசென்ட்டா பத்தி விட்டாரு..அவரை சொல்லியும் தப்பில்ல நாங்க 2 பேருமே சும்மா பளிங்கு கல் மாதிரி பல பளன்னு இருப்போம்..என்ன கலர் தான் கொஞ்சம் கம்மி..

கெத்த விட்டுட கூடாதே..அதனால வெளில வந்த உடனே.. "டேய் எங்களையே உள்ள  விட மாட்டேன்னு  சொல்லிட்டல்ல மகனே ஏரியா பக்கம் வாடா" அப்படின்னு ஏக வசனத்துல  வாடான்னு போடான்னு வடிவேலு மாதிரி கத்திட்டு இருந்தோம். நானும் என் நண்பனும் ஒருத்தருக்கு ஒருத்தர் தடுத்துக்கற மாதிரி எங்களை நாங்களே காப்பாத்திட்டு, "தலைமகனே கலங்காதே..அசிங்க பட்டு வருந்தாதே" எங்களுக்கு நாங்களே ஆறுதல் பாட்டு பாடி வீடு வந்து சேர்ந்தோம்..கொஞ்சம் தூரம் வந்தப்புறம் நம்ம நண்பர் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம  "போடா மயிறு, சொல்லிருந்தா  நான் வண்டி எடுத்துட்டு வந்துருபேன்ல" அப்டின்னான். ( அப்போ சார் யமஹா RX 135 வெச்சுருந்தாரு).

நம்ம நண்பர் இப்போ வேற ஊர்ல பெட்ரோல் பங்க் வெச்சுட்டார், நான் தெலுகு தேசத்துக்கு வந்துட்டேன்..இங்க இருந்து ஊருக்கு போயிட்டு, வீட்டுக்கு நடந்து போறப்ப இந்த செக்யூரிட்டி அண்ணன் (என்ன மரியாதை) சமயத்துல எதிர்க்க வருவாரு, சுந்தர். Cய பாத்த வடிவேலு மாதிரி அப்படியே சைடுக்கா திரும்பி நடந்து போய்டுவேன்..ஒரு 2 வாரத்துக்கு முன்னாடி ஊருக்கு போனப்போ அந்த கல்யாண மண்டபத்தை பாத்துட்டே போனேன், சுவத்துல  கண்ணயன், அந்த செக்யூரிட்டி அண்ணனோட பேரும் படமும் போட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி இருந்துது. வாடா போடான்னு மரியாதை இல்லாம பேசினதை நினைச்சு பல தடவ பீல் பண்ணி, எப்போவாச்சும் ரோட்ல போகும்போது மன்னிப்பு கேட்டுடலாம்னு நினைச்சிருக்கேன்'..இனிமே கேக்க முடியாது..அவரோட பேரு கூட அந்த போஸ்டர் பாத்து தான் எனக்கு தெரியும்..

மரியாதை இல்லாம பேசினதுக்கு மன்னிச்சிருங்கண்ணே.

July 21, 2016

முதல் நாள் முதல் காட்சி

இது ஒரு விபரீதமான, வித்யாசமான நோய். ஏதாவது புது படம் ரிலீஸ் ஆகும் போது அத முதல்ல நாம பாத்துட்டு, நான் முதல் நாள் முதல் ஷோ பாத்துட்டேன்ன்னு சொல்ற பெருமை, சொல்லி புரிவதில்லை. 2001ல் தீனா படத்துல அஜித் ரசிகன்ற பேர்ல ஆரம்பிச்சது, தொடர்ச்சியா அஜித் படம், கமல் படம், மணிரத்னம் படம், ஷங்கர் படம்னு முதல் நாள் பாக்குற வியாதி அப்படியே விரிவடைஞ்சுது. வகை தொகை இல்லாம சூர்யா நடிச்ச ஸ்ரீ , உன்னை நினைத்து, பாண்டவர் பூமி, Die Another Day, புன்னகை தேசம் இப்படின்னு ஏன் பாக்குறோம் எதுக்கு பாக்குறோம்னு தெரியாம 1st day 1st Show மோகம் தலைவிரிச்சு ஆடுச்சு.  நடுவுல ஆழவார், ரெட், ஆஞ்சநேயா, ஜி போன்ற அஜித் காவிய படைப்புகளும் அடங்கும்.

மெது மெதுவா, வேலை மற்றும் மற்ற கேளிக்கைகளில் கவனம் இப்படி சிதறினதால இந்த முதல் நாள் முதல் காட்சி மோகம் கொஞ்சமா குறைஞ்சுது. முதல் நாள் நைட் ஷோ, அல்லது இரண்டாவது, மூன்றாவது நாட்களில் பார்ப்பது அப்படி குறைஞ்சு இன்னைக்கு ஊரே பத்திட்டு எரியுற கபாலி படத்தை ஆறாவது நாள் தான் பாக்க போரேன். 

போன டிசம்பர்ல சென்னைல வெள்ளம் வந்து சாப்பாடு தண்ணி இல்ல, வேற வழி எதுவும் இல்லாதப்போ இந்த 10 ரூபா பால் பாக்கெட்லாம் 50 ரூபா வித்த மாதிரி இந்த கபாலி டிக்கெட் ஏடா குடமான ரேட்ல விக்குது. 2008ல ஜூன் 13, வெள்ளிக்கிழமை  தசாவதாரம் ரிலீஸ். அன்னைக்கு சாயந்தரம் கொடைக்கானல் போக பிளான் போட்டாச்சு. அதுக்காக வியாழக்கிழமை ப்ரெவீவ் ஷோவ வெற்றி தியேட்டர் ஷட்டர்ல மண்டைல அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட 200 ரூபா கொடுத்த பாத்தா மன தைரியம் இப்போ இல்ல (2008 ல 200 ரூபா டிக்கெட் விலை ஜாஸ்தி தான், 2010 ல எந்திரனுக்கே 150 தான் அதுவும் 2ஆவது நாள் .)

இப்போ புதுசா இன்னொரு ட்ரெண்டும் இருக்கு படம் ரிலீஸ் ஆகி அந்த 2,3 நாள்ல பாக்கலைன்னா நம்ம தற்கொலை பண்ணி செத்து போக சொல்வாங்க போலருக்கு. சமீபத்துல இந்த பாஹுபலி படத்துக்கு அந்த மாதிரி பில்ட் அப் கொடுத்தாங்க. அதையே தான் இப்போவும் கபாலிக்கு நடக்குது. எப்போ பாத்தாலும் படம் தான். முதல் நாள் தவிர்த்து அடுத்தடுத்த நாட்கள்ல பாக்குறவங்களுக்கும் ரஜினி முகத்தை தான் காட்ட போறாரு, முதுகை இல்ல.

இதுக்கு நடுவுல மழை வெள்ளத்துல ரஜினி சென்னைக்கு என்ன பண்ணாரு, அவர் படத்தை தியேட்டர்ல பாக்காதீங்க டவுன்லோட் பண்ணி பாருங்கன்னு ஒரு குரூப் சொல்லுது. ஏன் டா டேய்...மழை வெள்ளம் வந்தா காப்பாத்துறது ரஜினியோட கடமையா, அரசாங்கத்தோட கடமையா. அப்படியாப்பட்ட  அரசாங்கத்தையே ஒட்டு போட்டு திருப்பி ஆள  வெச்சுருக்கீங்க. இஷ்டம், வசதி , விருப்பம் இருந்தா தியேட்டர்ல  காசு கொடுத்து பாரு. இல்லையா ``திரைக்கு வந்து சில மாதங்களே ஆன`` அப்படின்னு ஜெயா டிவில  போடுவான் அப்போ பாரு. அத விட்டு உன்னோட திருட்டு தனத்தை இன்னொருத்தன செய்ய சொல்லாத.

இந்த மாதிரி நேரத்துல தியேட்டர் காரங்க இதை மாதிரி அநியாய விலைல டிக்கெட் கொடுக்கிறத அரசாங்கம் கட்டுப்படுத்தணும்னு சொல்றாங்க, பண்டிகை காலங்கள் ஆம்னி பஸ் டிக்கெட், பருப்பு விலை , தக்காளி விலை எல்லாம் ஏகபோகமா ஏறும்போது கேக்காத அரசாங்கமா இதை கேக்க போகுது...அவங்க தான் படத்தையே ரிலீஸ் பண்றாங்க..

இருக்கிறவன் காச கொடுத்து பாரு...இல்லாதவன் கொஞ்சம் வெயிட் பண்ணி 2,3 நாள் கழிச்சு பாரு அதுவும் இஷ்டம் இருந்தா.....ஒரு குடியும் முழுகாது..நல்லதே நடக்கட்டும்




July 28, 2016

நானும் சேட்ஜிதான்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

நம்ம ஹரித்வார் புலவர் திருவள்ளுவர் எல்லா உயிரும் சமம், அவனவன் செய்ற வேலைல தான் விஷயமே இருக்குனு சொல்லிருக்காரு. இதெல்லாம் புரியாம 2 பேரா போய் ஒரு உலக மஹா மொக்க வாங்கின கதை தான் இது..

முன்னொரு காலத்துல காலேஜ் படிச்சு முடிச்சு வெட்டியா ஊர் சுத்திட்டு இருந்தப்போ நடந்தது இது. நான் இருந்த ஏரியாவுல பாலாஜி மஹால்னு ஒரு பிரம்மாண்டமான கல்யாண மண்டபம் இருந்துது..ஏரியாவுல இருக்குற அரசியல்வாதிங்க, பெரிய தலைங்க வீட்டு கல்யாணமெல்லாம் அங்க தான் நடக்கும், அது ஒரு பணக்கார ஸ்பாட் அப்படின்னு எங்க மனசுக்குள்ள நாங்களே பிக்ஸ் பண்ணிக்கிட்டு அந்த கல்யாண மண்டபத்துல நடக்குற கல்யாணத்த ஆஆன்னு வாய பொளந்துட்டு பாப்போம்..

இந்த ஹோலி இருக்குல்ல அப்போ எங்க ஏரியாவுல இருக்குற சேட் ஜீ எல்லாம் இந்த மண்டபத்தை புக் பண்ணி இந்த தாண்டிய டான்ஸ் ஆடுவாங்க. அது மூணு இல்லனா நாலு நாளைக்கு நடக்கும். இந்த தாண்டியா  டான்ஸ் குஜராத்தி ஆளுங்க ஆடுவாங்க, பொதுவா ஹோலி நேரத்துல கிருஷ்ணா லீலா காணசப்ட்ல ஆடுவாங்க. இங்க ஹைதராபாத்ல துர்கா பூஜையப்போ நடக்குது.

விஷயத்துக்கு,வருவோம், நம்ம ஏரியாவுல சேட்டு பொண்ணுங்க கலர் காலரா டிரஸ் போட்டுட்டு உலா வருவதை பாத்தா உடனே தான் பட்டாம்பூச்சி பறக்கும், மணி அடிக்கும், பல்பு எரியும், உள்ளுக்குள்ள உருண்டை எல்லாம் உருளுமே. அந்த டான்ஸ்ல நாம எப்படி உள்ள போய் அவங்களோட ஜாயின் பண்றது அப்படின்னு நானும் என்னோட உயிர் தோழர் சுரேஷும் ஆலசோனை செஞ்சோம்..உடனடியா நல்லா குளிச்சு முடிச்சு, மூஞ்சையெல்லாம் நல்லா கழுவி ஒரு 5 ரூபா Fair & Lovely (தங்கச்சிது தான், அப்போ மென்ஸ் கிரீம் வரல) எடுத்து மூஞ்சு மொத்தமும் பூசி ஒரு ஆதி காலத்து பைஜாமா ஜிப்பா எடுத்து மாட்டிட்டு சேட்ஜி மாதிரியே சைக்கிள்ல அந்த மண்டபத்துக்கு போனோம்..

சைக்கிள் மண்டபத்துக்கு கொஞ்சம் முன்னாடியே ரோட்ல நிறுத்திட்டோம். பொண்ணுங்க பாத்து கேவலமா நெனைக்க போகுதுன்னு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. நேரா உள்ள போக பாத்தோம்.அப்போ ஒரு கை  எங்களை தடுத்து நிறுத்திச்சு,  " தம்பிங்களா எங்க போறீங்க" அப்படின்னு நின்னுட்டு இருந்த செக்யூரிட்டி எங்களை கேட்டாரு, நான் ரொம்ப அப்பாவியா  "டான்ஸ் ஆட" அப்படின்னு சொன்னேன். "தம்பி இது பெரிய இடத்து பசங்க அவங்க பண்டிகையை கொண்டாட வந்துருக்காங்க, நீங்க எங்க போறீங்க மாப்ள மாதிரி" அப்படின்னாரு..பெரிய இடது பசங்க அப்படின்ற வார்த்தையை கேட்ட உடனே கோபம் தலைக்கேறுச்சு, ஒன்னும் பண்ண முடியாதே, உள்ள போக முடியாம போச்சுன்னா..சமாளிக்கலாம்னு சொல்லி.."பாய் சாப் மெய்ன் பி ஹிந்தி வாலா  ஹூன், ஓ மேரா தோஸ்த் ஹை, மெய்ன் அந்தர் ஜானா ஹை," அப்படின்னு ஹிந்தில நான் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி பாத்தேன். ஒன்னும் நடக்கல, இதுக்கு நடுவுல உள்ள இருந்த சூப் பாய்ஸ் அண்ட் சூப்பர் கேர்ள்ஸ் எங்க நாங்க உள்ள வந்துருவோமோனு பயத்துலயே எங்களை பாத்துட்டு இருந்தாங்க.."போங்க போங்க ஆள பாத்தா தெரியாதா....சேட்டு பசங்கன்னு பொய் சொல்லி டப்பா ஹிந்தில பேசினா நாங்க ஏமாந்துருவோமா., போ போ ('ங்க' கட் ஆயிருச்சு)" அப்படின்னு எங்களை கழுத்த  புடிச்சு வெளில தள்ளாம வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா  அப்படின்னு டீசென்ட்டா பத்தி விட்டாரு..அவரை சொல்லியும் தப்பில்ல நாங்க 2 பேருமே சும்மா பளிங்கு கல் மாதிரி பல பளன்னு இருப்போம்..என்ன கலர் தான் கொஞ்சம் கம்மி..

கெத்த விட்டுட கூடாதே..அதனால வெளில வந்த உடனே.. "டேய் எங்களையே உள்ள  விட மாட்டேன்னு  சொல்லிட்டல்ல மகனே ஏரியா பக்கம் வாடா" அப்படின்னு ஏக வசனத்துல  வாடான்னு போடான்னு வடிவேலு மாதிரி கத்திட்டு இருந்தோம். நானும் என் நண்பனும் ஒருத்தருக்கு ஒருத்தர் தடுத்துக்கற மாதிரி எங்களை நாங்களே காப்பாத்திட்டு, "தலைமகனே கலங்காதே..அசிங்க பட்டு வருந்தாதே" எங்களுக்கு நாங்களே ஆறுதல் பாட்டு பாடி வீடு வந்து சேர்ந்தோம்..கொஞ்சம் தூரம் வந்தப்புறம் நம்ம நண்பர் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம  "போடா மயிறு, சொல்லிருந்தா  நான் வண்டி எடுத்துட்டு வந்துருபேன்ல" அப்டின்னான். ( அப்போ சார் யமஹா RX 135 வெச்சுருந்தாரு).

நம்ம நண்பர் இப்போ வேற ஊர்ல பெட்ரோல் பங்க் வெச்சுட்டார், நான் தெலுகு தேசத்துக்கு வந்துட்டேன்..இங்க இருந்து ஊருக்கு போயிட்டு, வீட்டுக்கு நடந்து போறப்ப இந்த செக்யூரிட்டி அண்ணன் (என்ன மரியாதை) சமயத்துல எதிர்க்க வருவாரு, சுந்தர். Cய பாத்த வடிவேலு மாதிரி அப்படியே சைடுக்கா திரும்பி நடந்து போய்டுவேன்..ஒரு 2 வாரத்துக்கு முன்னாடி ஊருக்கு போனப்போ அந்த கல்யாண மண்டபத்தை பாத்துட்டே போனேன், சுவத்துல  கண்ணயன், அந்த செக்யூரிட்டி அண்ணனோட பேரும் படமும் போட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி இருந்துது. வாடா போடான்னு மரியாதை இல்லாம பேசினதை நினைச்சு பல தடவ பீல் பண்ணி, எப்போவாச்சும் ரோட்ல போகும்போது மன்னிப்பு கேட்டுடலாம்னு நினைச்சிருக்கேன்'..இனிமே கேக்க முடியாது..அவரோட பேரு கூட அந்த போஸ்டர் பாத்து தான் எனக்கு தெரியும்..

மரியாதை இல்லாம பேசினதுக்கு மன்னிச்சிருங்கண்ணே.

July 21, 2016

முதல் நாள் முதல் காட்சி

இது ஒரு விபரீதமான, வித்யாசமான நோய். ஏதாவது புது படம் ரிலீஸ் ஆகும் போது அத முதல்ல நாம பாத்துட்டு, நான் முதல் நாள் முதல் ஷோ பாத்துட்டேன்ன்னு சொல்ற பெருமை, சொல்லி புரிவதில்லை. 2001ல் தீனா படத்துல அஜித் ரசிகன்ற பேர்ல ஆரம்பிச்சது, தொடர்ச்சியா அஜித் படம், கமல் படம், மணிரத்னம் படம், ஷங்கர் படம்னு முதல் நாள் பாக்குற வியாதி அப்படியே விரிவடைஞ்சுது. வகை தொகை இல்லாம சூர்யா நடிச்ச ஸ்ரீ , உன்னை நினைத்து, பாண்டவர் பூமி, Die Another Day, புன்னகை தேசம் இப்படின்னு ஏன் பாக்குறோம் எதுக்கு பாக்குறோம்னு தெரியாம 1st day 1st Show மோகம் தலைவிரிச்சு ஆடுச்சு.  நடுவுல ஆழவார், ரெட், ஆஞ்சநேயா, ஜி போன்ற அஜித் காவிய படைப்புகளும் அடங்கும்.

மெது மெதுவா, வேலை மற்றும் மற்ற கேளிக்கைகளில் கவனம் இப்படி சிதறினதால இந்த முதல் நாள் முதல் காட்சி மோகம் கொஞ்சமா குறைஞ்சுது. முதல் நாள் நைட் ஷோ, அல்லது இரண்டாவது, மூன்றாவது நாட்களில் பார்ப்பது அப்படி குறைஞ்சு இன்னைக்கு ஊரே பத்திட்டு எரியுற கபாலி படத்தை ஆறாவது நாள் தான் பாக்க போரேன். 

போன டிசம்பர்ல சென்னைல வெள்ளம் வந்து சாப்பாடு தண்ணி இல்ல, வேற வழி எதுவும் இல்லாதப்போ இந்த 10 ரூபா பால் பாக்கெட்லாம் 50 ரூபா வித்த மாதிரி இந்த கபாலி டிக்கெட் ஏடா குடமான ரேட்ல விக்குது. 2008ல ஜூன் 13, வெள்ளிக்கிழமை  தசாவதாரம் ரிலீஸ். அன்னைக்கு சாயந்தரம் கொடைக்கானல் போக பிளான் போட்டாச்சு. அதுக்காக வியாழக்கிழமை ப்ரெவீவ் ஷோவ வெற்றி தியேட்டர் ஷட்டர்ல மண்டைல அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட 200 ரூபா கொடுத்த பாத்தா மன தைரியம் இப்போ இல்ல (2008 ல 200 ரூபா டிக்கெட் விலை ஜாஸ்தி தான், 2010 ல எந்திரனுக்கே 150 தான் அதுவும் 2ஆவது நாள் .)

இப்போ புதுசா இன்னொரு ட்ரெண்டும் இருக்கு படம் ரிலீஸ் ஆகி அந்த 2,3 நாள்ல பாக்கலைன்னா நம்ம தற்கொலை பண்ணி செத்து போக சொல்வாங்க போலருக்கு. சமீபத்துல இந்த பாஹுபலி படத்துக்கு அந்த மாதிரி பில்ட் அப் கொடுத்தாங்க. அதையே தான் இப்போவும் கபாலிக்கு நடக்குது. எப்போ பாத்தாலும் படம் தான். முதல் நாள் தவிர்த்து அடுத்தடுத்த நாட்கள்ல பாக்குறவங்களுக்கும் ரஜினி முகத்தை தான் காட்ட போறாரு, முதுகை இல்ல.

இதுக்கு நடுவுல மழை வெள்ளத்துல ரஜினி சென்னைக்கு என்ன பண்ணாரு, அவர் படத்தை தியேட்டர்ல பாக்காதீங்க டவுன்லோட் பண்ணி பாருங்கன்னு ஒரு குரூப் சொல்லுது. ஏன் டா டேய்...மழை வெள்ளம் வந்தா காப்பாத்துறது ரஜினியோட கடமையா, அரசாங்கத்தோட கடமையா. அப்படியாப்பட்ட  அரசாங்கத்தையே ஒட்டு போட்டு திருப்பி ஆள  வெச்சுருக்கீங்க. இஷ்டம், வசதி , விருப்பம் இருந்தா தியேட்டர்ல  காசு கொடுத்து பாரு. இல்லையா ``திரைக்கு வந்து சில மாதங்களே ஆன`` அப்படின்னு ஜெயா டிவில  போடுவான் அப்போ பாரு. அத விட்டு உன்னோட திருட்டு தனத்தை இன்னொருத்தன செய்ய சொல்லாத.

இந்த மாதிரி நேரத்துல தியேட்டர் காரங்க இதை மாதிரி அநியாய விலைல டிக்கெட் கொடுக்கிறத அரசாங்கம் கட்டுப்படுத்தணும்னு சொல்றாங்க, பண்டிகை காலங்கள் ஆம்னி பஸ் டிக்கெட், பருப்பு விலை , தக்காளி விலை எல்லாம் ஏகபோகமா ஏறும்போது கேக்காத அரசாங்கமா இதை கேக்க போகுது...அவங்க தான் படத்தையே ரிலீஸ் பண்றாங்க..

இருக்கிறவன் காச கொடுத்து பாரு...இல்லாதவன் கொஞ்சம் வெயிட் பண்ணி 2,3 நாள் கழிச்சு பாரு அதுவும் இஷ்டம் இருந்தா.....ஒரு குடியும் முழுகாது..நல்லதே நடக்கட்டும்