November 20, 2013

நாயகன்

அடி நம்பர் 4:  `டேய் இன்னைக்கு காலேஜ்க்கு என்ன சட்ட போட்டுட்டு போன, எடுத்துட்டு வா பாப்போம்` . அடுத்த நொடி நான் என் சட்டய எடுத்துட்டு போய்  காட்டினேன்...``பளார்`` கன்னத்துல செம அடி.

அடி நம்பர் 3: நான் ஒழுங்கா உக்காந்து படிச்சிட்டு இருந்தேன் அப்போ `` போஸ்ட் ஆபீஸ்ல BE  Application Form  தராங்களே வாங்கலாமா..`` என்னோட பதில் `` வேணாம் வேணாம் எதுக்கு தண்டமா 450 ரூபா செலவு பண்ணனும்`` - பளார்.

அடி நம்பர் 2: Cricket  Ground  அடுத்த பந்த எதிர்பார்த்து தயாராகிட்டு இருந்தேன், அப்போ ஒரு உருவம் மைதானத்துகுள்ள வந்து, Stump உருவி, என்னைய அடி பின்னி எடுத்துது, கடைசியா வழக்கம் போல ``பளார்``

அடி நம்பர் 1: இந்த வாட்டி எதுவும் கேக்கல ஆனா `` பளார்`` அதுக்கப்புறம் கேள்வி ``இன்னைக்கு என்ன பண்ண காலேஜ்ல``. நான் `` ஒன்னும் பண்ணலியே`` , மறுபடியும் ``பளார்``

இப்படி ஒரு வாயில்லா பூச்சிய போட்டு பளார் பளார்னு அடிச்சது யாரு. 

அடி நம்பர் 1 சம்பவம் நடந்த அடுத்த நாள். எனக்கு Inorganic Chemistry  எடுக்குற professor பேரு பரமஹம்சம். பேருக்கேத்த  மாதிரியே அமைதியான சுபாவம். அவர் ரூம் கதவு தட்ற  சத்தம் கேட்டு நிமிர்ந்து பாத்துட்டு கேட்டாரு `` யார் சார் நீங்க, என்ன வேணும் உங்களுக்கு``. அப்போ என்ன `பளார் பளார்னு` அடிச்ச ஜீவராசி தன்னோட திருவாய் மலர்ந்து  சொன்ன பதிலுக்கு, கண்கள்ல நீர் மல்க உடனடியா பரமஹம்சம் சார் கொடுத்த reply `` அந்த தெய்வத்த  பெத்தெடுத்த தெய்வமா சார் நீங்க`` ......  யா, யூ  ஆர் ரைட்,  அந்த பளாருக்கு சொந்தக்காரர் My  Daddy. ( எங்க வாத்தியார் அடிச்ச இந்த பஞ்ச், பின்னாடி  Chemistry  Dept  பூரா பிரபலம் ஆச்சு).

சினிமாவுல எதிர் எதிர் துருவங்கள் ஒண்ணா சேர்ந்து அட்ஜஸ்ட் பண்ணி வாழறாங்க அப்படின்னு காமிக்கனும்னாலே, உடனே ஒரு பொன்னையும், பையனையும் தான் காட்டுவாங்க. ஆனா அத விட ஏகப்பட்ட விதத்துல மாறுபட்டு, பாக்குற சினிமா, சாபிடற சாப்பாடு, வெட்டுற முடி, பேசுற பேச்சு, நடக்குற நடை, உடுத்துற உடை அப்படின்னு நிறைய வித்யாசம் இருந்தும் பல வருஷம் ஒண்ணா இருந்து ஒருத்தருக்கொருத்தர் விட்டு கொடுத்து, கேக்காமலேயே தேவையான உதவியும், நல்ல உபதேசமும் கிடைக்குற உறவு தந்தை - மகன் உறவு என்பது அடியேனுடைய பணிவான கருத்து.

எல்லார் மாதிரியும் ``நான் சின்ன வயசுல கண் கலங்கினதே  இல்ல, கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தாரு, எனக்கு பிடிச்சதுக்கு மறுப்பேதும் சொன்னதில்ல , My Daddy Strongest, Most loveable daddy, bla bla bla bla ....... அப்படி இப்படின்னு ஜல்லி அடிக்க போறதில்ல.தன்னோட கஷ்டமான சூழ்நிலையிலும், சாப்பாட்டுக்கு வழி இல்லைன்னாலும் எங்கள எப்படி கவனிசுகிட்டாறு அப்படின்ற செண்டிமெண்ட் கதைய சொல்லி கண்கலங்க வெக்க போறதில்ல. நான் ஏகப்பட்ட தடவ ஏடாகூடமா பண்ண அயோக்ய தனத்த எப்படி ப்ராக்டிகலா சமாளிச்சாரு அப்படின்னு ஒரு சின்ன விரிவுரை அவ்ளோ தான்.

 1969 ஒரு கார்த்திகை தீபம் அப்போ எங்க தாத்தா, அதாவது எங்கப்பாவோட அப்பா, நெஞ்சு வலியில  இறந்து போனாரு, 10th பரீட்சை எழுத வேண்டிய எங்கப்பாவ வழக்கம் போல `குடும்ப சூழ்நிலை - வேலைக்கு போகணும்` அப்படின்ற வார்த்தைகள் சுட பாத்துச்சு, கூட்டு குடும்பமா ஏகப்பட்ட பேர் இருக்குற இடமாச்சே, சென்னைல Saphire Theatre ல டிக்கெட் கிழிக்கிற வேலையோட சேர்த்து படிப்பையும் கவனிச்சு பரிட்சையும் எழுதி இருக்காரு. இது போக காபி அரைக்குற மில், அப்படி இப்படின்னு இன்னும் நிறைய வேலைகள் இருக்கு. தன் சொந்த உழைப்புல காலஜெல்லாம் படிச்சு Civil Supplies, Directorate of  Medical Education, TANSI  இப்படி போன்ற அரசு உத்தியோகத்துல உக்கார்ற அளவுக்கு தலைவன் கிட்ட சரக்கு இருந்தும், வழக்கம் போல கலையார்வம் எந்த வேலைலயும் நிலையா இருக்க விடல. அதோட என்னையும் சேர்த்து எங்கப்பாவ ஏமாத்தினவங்க லிஸ்ட் எடுத்தா, இது வரைக்கும் நயன்தாரா கழட்டி விட்ட ஹீரோஸ்  லிஸ்ட்ட விட பெரிசா இருக்கும், அதனால இருக்குற சொத்தும் கை விட்டு போச்சே தவிர, புதுசா கைக்கு எதுவும் வரல..

ஆனா அதுக்கு நேரெதிரா, ``பள்ளிக்கூடம் காலேஜ் அப்படின்னு வாழ்க்கைல 21 வருஷம் போயிருச்சு, அடுத்து வேலைன்னு இன்னொரு 30 வருஷம் போயிரும், நடுவுல ஒரு வருஷம் ரெஸ்ட் எடுதுக்குரேன்னு`` சொன்ன என்கிட்ட மறுபேச்சு பேசாம ஓகே சொன்னாரு. உதவாக்கரை, இப்படியே அவன விட்டா ஒண்ணுமில்லாம போய்டுவான் அப்படீன்னு கேள்வி கேட்ட ஆளுங்களுக்கும் சளைக்காம (என்ன எந்த வேலைக்கு அனுப்பாம) பதிலும் சொன்னாரு. இதுக்கு நடுவுல காதல் பஞ்சாயத்து வேற. இப்படி தான் முடி வெட்டனும், இப்படி தான் டிரஸ் போடணும், இத பண்ணு இத பண்ணாத அப்படின்னு எந்த கட்டு பாடும் இருந்ததில்ல ( ஒரு தடவ சரோஜா தேவி புக் படிச்சு கூட மாட்டி இருக்கேன், அதுக்கே ஒன்னும் பன்னல..), .2 விஷயத்த தவிர ஒன்னு ஒழுங்க படிக்கணும், இன்னொன்னு வழக்கம் போல காதல்( அதெல்லாம் தனி தனி எபிசொட் இருக்கு படிச்சு தெரிஞ்சுக்கோங்க).தண்ணி அடிக்கிறதே நாங்கெல்லாம் வீட்ல சொல்லிட்டு தான் போவோம், அடிகாதன்னு சொல்லாம, எதுவா  இருந்தாலும்  அளவா இரு  அப்படின்னு அட்வைஸ் தான் கிடைச்சிருக்கு.

திருவல்லிக்கேணி இருசப்ப கிராமணி தெருவுல இருந்து ஹிந்து ஹை சஸ்கூலுக்கு கூட்டிட்டு போக ஆரம்பிச்சு - பார்த்தசாரதி கோவில் பக்கத்துல இருக்குற ரகு மாஸ்டர் கிட்ட புல்லாங்குழல் கத்துக்க கூட்டிட்டு போக  தொடங்கி, அப்படியே அது நுங்கம்பாக்கதுக்கு ஷிப்ட் ஆனப்பவும் ஜெர்க் ஆகாம, வேலைக்கு போக ஆரம்பிச்சபுரமும் சாலிக்ராமத்துல Keyboard கிளாஸ் கொண்டு பொய் விடறதுல தொடங்கி,இப்போ என் ஜாதகத்த கைல வெச்சுகிட்டு  சுத்திட்டு தான் இருக்காரு. 

இந்த மனுஷன எந்த வகைல ஏமாத்தலாம்னு யோசிச்சு யோசிச்சு, என் மண்டைல 4444 முடி கொட்டினது தான் மிச்சம். எங்க இருந்துதான் அந்த அறிவு வருதோ. படிப்பு, வேலை, கலை, இசை அப்படின்னு எந்த விஷயத்த பேசினாலும் அத பத்தி பேசி , நம்ம கிட்ட எதிர் கேள்வி கேட்டு மடக்கவும் செய்வாரு. சரி நாம அதானே படிக்கிறோம் அதனால Chemistry  பத்தி கேக்கலாம்னு பாத்தா நமக்கு அத பத்தி ஒன்னும் தெரியாது....இப்போவும்  வேற ஒண்ணுமே கிடைக்காத பட்சத்துல கிடார்ல `` எங்க A minor  வாசி பாப்போம், C, Am, F sharp, G  வாசி பாப்போம்னு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் மண்டைல மத்தளம் வாசிச்சிட்டு தான் இருக்காரு.

சின்ன வயசுல இருந்து நான்  இந்த பைக், இத்யாதி, இத்யாதி போல ஓரளவு  ஆடம்பரமா எதையும் அனுபவிச்சதில்ல அப்படின்னு ஏகப்பட்ட தடவ எங்க 2 பேருக்கும் வாய் தகராறு முத்தி இருக்கு (  2 மாசம் வரிக்கும் பேசாம இருந்துருக்கோம்...). ஆனா அடிபடையா  கிடைக்க வேண்டிய நிறைய விஷயம் அவருக்கு இது வரைக்கும் கிடைச்சதே இல்ல அப்படின்ற உண்மை எனக்கு இப்போ வரைக்கும் உரைச்சதே இல்ல.. வழக்கம் போல எல்லா அப்பாவையும் போல, எந்த பண்டிகைக்கும் எங்க அப்பா புது துணி எடுத்தோ, போட்டோ நான் பாத்ததே இல்ல. நாமளாவது இந்த கம்ப்யூட்டர் காலத்துல Facebook, Whatsapp, தண்ணி அடிப்பது, ஆபீஸ்ல கேக் வெட்டுவதுன்னு,  ஏதோ அப்படி இப்படின்னு நம்ம பிறந்த நாளை  ஓரளவுக்காவது கொண்டாடி இருப்போம். என் நினைவு தெரிஞ்சு December 8, ரொம்ப சாதரணமா போகுமே தவிர, பிறந்த நாள் அப்படின்னு எந்த சலுகையும், செலவையும் எடுதுகிட்டதில்ல.

Sachin Tendulkar  ரிடைர் ஆகுரானு தெரிஞ்ச உடனே Facebook  Status, ஒரே அழுகாச்சி, போச்சே, போச்சே,இனி ஒருத்தன் இப்படி கிடைப்பானா அப்படின்னு பீல் பண்ண நான்...இந்த வயசுலயும் ரெஸ்ட் அப்படின்ற வார்த்தைய கேள்வி படாத, கண்டிப்பா இது மாதிரி ஒரு ஆளு சப்போர்ட்டுக்கு எனக்கு கிடைக்கவே கிடைக்காதுன்னு தெரிஞ்சும், எங்கப்பாவ பத்தி ( எல்லாருடைய அப்பாவும் தான்) கொஞ்சம் கூட பீல் பண்ணாத இந்த கேடு கேட்ட ஜென்மத்த என்ன சொல்றது..

அத நினைக்குற அளவுக்கு ஒரு மனித மனம் எனக்கு சீக்கிரம் வரணும்னு எனக்கு நானே prayer  பண்ணிக்கிறேன்...

November 20, 2013

நாயகன்

அடி நம்பர் 4:  `டேய் இன்னைக்கு காலேஜ்க்கு என்ன சட்ட போட்டுட்டு போன, எடுத்துட்டு வா பாப்போம்` . அடுத்த நொடி நான் என் சட்டய எடுத்துட்டு போய்  காட்டினேன்...``பளார்`` கன்னத்துல செம அடி.

அடி நம்பர் 3: நான் ஒழுங்கா உக்காந்து படிச்சிட்டு இருந்தேன் அப்போ `` போஸ்ட் ஆபீஸ்ல BE  Application Form  தராங்களே வாங்கலாமா..`` என்னோட பதில் `` வேணாம் வேணாம் எதுக்கு தண்டமா 450 ரூபா செலவு பண்ணனும்`` - பளார்.

அடி நம்பர் 2: Cricket  Ground  அடுத்த பந்த எதிர்பார்த்து தயாராகிட்டு இருந்தேன், அப்போ ஒரு உருவம் மைதானத்துகுள்ள வந்து, Stump உருவி, என்னைய அடி பின்னி எடுத்துது, கடைசியா வழக்கம் போல ``பளார்``

அடி நம்பர் 1: இந்த வாட்டி எதுவும் கேக்கல ஆனா `` பளார்`` அதுக்கப்புறம் கேள்வி ``இன்னைக்கு என்ன பண்ண காலேஜ்ல``. நான் `` ஒன்னும் பண்ணலியே`` , மறுபடியும் ``பளார்``

இப்படி ஒரு வாயில்லா பூச்சிய போட்டு பளார் பளார்னு அடிச்சது யாரு. 

அடி நம்பர் 1 சம்பவம் நடந்த அடுத்த நாள். எனக்கு Inorganic Chemistry  எடுக்குற professor பேரு பரமஹம்சம். பேருக்கேத்த  மாதிரியே அமைதியான சுபாவம். அவர் ரூம் கதவு தட்ற  சத்தம் கேட்டு நிமிர்ந்து பாத்துட்டு கேட்டாரு `` யார் சார் நீங்க, என்ன வேணும் உங்களுக்கு``. அப்போ என்ன `பளார் பளார்னு` அடிச்ச ஜீவராசி தன்னோட திருவாய் மலர்ந்து  சொன்ன பதிலுக்கு, கண்கள்ல நீர் மல்க உடனடியா பரமஹம்சம் சார் கொடுத்த reply `` அந்த தெய்வத்த  பெத்தெடுத்த தெய்வமா சார் நீங்க`` ......  யா, யூ  ஆர் ரைட்,  அந்த பளாருக்கு சொந்தக்காரர் My  Daddy. ( எங்க வாத்தியார் அடிச்ச இந்த பஞ்ச், பின்னாடி  Chemistry  Dept  பூரா பிரபலம் ஆச்சு).

சினிமாவுல எதிர் எதிர் துருவங்கள் ஒண்ணா சேர்ந்து அட்ஜஸ்ட் பண்ணி வாழறாங்க அப்படின்னு காமிக்கனும்னாலே, உடனே ஒரு பொன்னையும், பையனையும் தான் காட்டுவாங்க. ஆனா அத விட ஏகப்பட்ட விதத்துல மாறுபட்டு, பாக்குற சினிமா, சாபிடற சாப்பாடு, வெட்டுற முடி, பேசுற பேச்சு, நடக்குற நடை, உடுத்துற உடை அப்படின்னு நிறைய வித்யாசம் இருந்தும் பல வருஷம் ஒண்ணா இருந்து ஒருத்தருக்கொருத்தர் விட்டு கொடுத்து, கேக்காமலேயே தேவையான உதவியும், நல்ல உபதேசமும் கிடைக்குற உறவு தந்தை - மகன் உறவு என்பது அடியேனுடைய பணிவான கருத்து.

எல்லார் மாதிரியும் ``நான் சின்ன வயசுல கண் கலங்கினதே  இல்ல, கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தாரு, எனக்கு பிடிச்சதுக்கு மறுப்பேதும் சொன்னதில்ல , My Daddy Strongest, Most loveable daddy, bla bla bla bla ....... அப்படி இப்படின்னு ஜல்லி அடிக்க போறதில்ல.தன்னோட கஷ்டமான சூழ்நிலையிலும், சாப்பாட்டுக்கு வழி இல்லைன்னாலும் எங்கள எப்படி கவனிசுகிட்டாறு அப்படின்ற செண்டிமெண்ட் கதைய சொல்லி கண்கலங்க வெக்க போறதில்ல. நான் ஏகப்பட்ட தடவ ஏடாகூடமா பண்ண அயோக்ய தனத்த எப்படி ப்ராக்டிகலா சமாளிச்சாரு அப்படின்னு ஒரு சின்ன விரிவுரை அவ்ளோ தான்.

 1969 ஒரு கார்த்திகை தீபம் அப்போ எங்க தாத்தா, அதாவது எங்கப்பாவோட அப்பா, நெஞ்சு வலியில  இறந்து போனாரு, 10th பரீட்சை எழுத வேண்டிய எங்கப்பாவ வழக்கம் போல `குடும்ப சூழ்நிலை - வேலைக்கு போகணும்` அப்படின்ற வார்த்தைகள் சுட பாத்துச்சு, கூட்டு குடும்பமா ஏகப்பட்ட பேர் இருக்குற இடமாச்சே, சென்னைல Saphire Theatre ல டிக்கெட் கிழிக்கிற வேலையோட சேர்த்து படிப்பையும் கவனிச்சு பரிட்சையும் எழுதி இருக்காரு. இது போக காபி அரைக்குற மில், அப்படி இப்படின்னு இன்னும் நிறைய வேலைகள் இருக்கு. தன் சொந்த உழைப்புல காலஜெல்லாம் படிச்சு Civil Supplies, Directorate of  Medical Education, TANSI  இப்படி போன்ற அரசு உத்தியோகத்துல உக்கார்ற அளவுக்கு தலைவன் கிட்ட சரக்கு இருந்தும், வழக்கம் போல கலையார்வம் எந்த வேலைலயும் நிலையா இருக்க விடல. அதோட என்னையும் சேர்த்து எங்கப்பாவ ஏமாத்தினவங்க லிஸ்ட் எடுத்தா, இது வரைக்கும் நயன்தாரா கழட்டி விட்ட ஹீரோஸ்  லிஸ்ட்ட விட பெரிசா இருக்கும், அதனால இருக்குற சொத்தும் கை விட்டு போச்சே தவிர, புதுசா கைக்கு எதுவும் வரல..

ஆனா அதுக்கு நேரெதிரா, ``பள்ளிக்கூடம் காலேஜ் அப்படின்னு வாழ்க்கைல 21 வருஷம் போயிருச்சு, அடுத்து வேலைன்னு இன்னொரு 30 வருஷம் போயிரும், நடுவுல ஒரு வருஷம் ரெஸ்ட் எடுதுக்குரேன்னு`` சொன்ன என்கிட்ட மறுபேச்சு பேசாம ஓகே சொன்னாரு. உதவாக்கரை, இப்படியே அவன விட்டா ஒண்ணுமில்லாம போய்டுவான் அப்படீன்னு கேள்வி கேட்ட ஆளுங்களுக்கும் சளைக்காம (என்ன எந்த வேலைக்கு அனுப்பாம) பதிலும் சொன்னாரு. இதுக்கு நடுவுல காதல் பஞ்சாயத்து வேற. இப்படி தான் முடி வெட்டனும், இப்படி தான் டிரஸ் போடணும், இத பண்ணு இத பண்ணாத அப்படின்னு எந்த கட்டு பாடும் இருந்ததில்ல ( ஒரு தடவ சரோஜா தேவி புக் படிச்சு கூட மாட்டி இருக்கேன், அதுக்கே ஒன்னும் பன்னல..), .2 விஷயத்த தவிர ஒன்னு ஒழுங்க படிக்கணும், இன்னொன்னு வழக்கம் போல காதல்( அதெல்லாம் தனி தனி எபிசொட் இருக்கு படிச்சு தெரிஞ்சுக்கோங்க).தண்ணி அடிக்கிறதே நாங்கெல்லாம் வீட்ல சொல்லிட்டு தான் போவோம், அடிகாதன்னு சொல்லாம, எதுவா  இருந்தாலும்  அளவா இரு  அப்படின்னு அட்வைஸ் தான் கிடைச்சிருக்கு.

திருவல்லிக்கேணி இருசப்ப கிராமணி தெருவுல இருந்து ஹிந்து ஹை சஸ்கூலுக்கு கூட்டிட்டு போக ஆரம்பிச்சு - பார்த்தசாரதி கோவில் பக்கத்துல இருக்குற ரகு மாஸ்டர் கிட்ட புல்லாங்குழல் கத்துக்க கூட்டிட்டு போக  தொடங்கி, அப்படியே அது நுங்கம்பாக்கதுக்கு ஷிப்ட் ஆனப்பவும் ஜெர்க் ஆகாம, வேலைக்கு போக ஆரம்பிச்சபுரமும் சாலிக்ராமத்துல Keyboard கிளாஸ் கொண்டு பொய் விடறதுல தொடங்கி,இப்போ என் ஜாதகத்த கைல வெச்சுகிட்டு  சுத்திட்டு தான் இருக்காரு. 

இந்த மனுஷன எந்த வகைல ஏமாத்தலாம்னு யோசிச்சு யோசிச்சு, என் மண்டைல 4444 முடி கொட்டினது தான் மிச்சம். எங்க இருந்துதான் அந்த அறிவு வருதோ. படிப்பு, வேலை, கலை, இசை அப்படின்னு எந்த விஷயத்த பேசினாலும் அத பத்தி பேசி , நம்ம கிட்ட எதிர் கேள்வி கேட்டு மடக்கவும் செய்வாரு. சரி நாம அதானே படிக்கிறோம் அதனால Chemistry  பத்தி கேக்கலாம்னு பாத்தா நமக்கு அத பத்தி ஒன்னும் தெரியாது....இப்போவும்  வேற ஒண்ணுமே கிடைக்காத பட்சத்துல கிடார்ல `` எங்க A minor  வாசி பாப்போம், C, Am, F sharp, G  வாசி பாப்போம்னு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் மண்டைல மத்தளம் வாசிச்சிட்டு தான் இருக்காரு.

சின்ன வயசுல இருந்து நான்  இந்த பைக், இத்யாதி, இத்யாதி போல ஓரளவு  ஆடம்பரமா எதையும் அனுபவிச்சதில்ல அப்படின்னு ஏகப்பட்ட தடவ எங்க 2 பேருக்கும் வாய் தகராறு முத்தி இருக்கு (  2 மாசம் வரிக்கும் பேசாம இருந்துருக்கோம்...). ஆனா அடிபடையா  கிடைக்க வேண்டிய நிறைய விஷயம் அவருக்கு இது வரைக்கும் கிடைச்சதே இல்ல அப்படின்ற உண்மை எனக்கு இப்போ வரைக்கும் உரைச்சதே இல்ல.. வழக்கம் போல எல்லா அப்பாவையும் போல, எந்த பண்டிகைக்கும் எங்க அப்பா புது துணி எடுத்தோ, போட்டோ நான் பாத்ததே இல்ல. நாமளாவது இந்த கம்ப்யூட்டர் காலத்துல Facebook, Whatsapp, தண்ணி அடிப்பது, ஆபீஸ்ல கேக் வெட்டுவதுன்னு,  ஏதோ அப்படி இப்படின்னு நம்ம பிறந்த நாளை  ஓரளவுக்காவது கொண்டாடி இருப்போம். என் நினைவு தெரிஞ்சு December 8, ரொம்ப சாதரணமா போகுமே தவிர, பிறந்த நாள் அப்படின்னு எந்த சலுகையும், செலவையும் எடுதுகிட்டதில்ல.

Sachin Tendulkar  ரிடைர் ஆகுரானு தெரிஞ்ச உடனே Facebook  Status, ஒரே அழுகாச்சி, போச்சே, போச்சே,இனி ஒருத்தன் இப்படி கிடைப்பானா அப்படின்னு பீல் பண்ண நான்...இந்த வயசுலயும் ரெஸ்ட் அப்படின்ற வார்த்தைய கேள்வி படாத, கண்டிப்பா இது மாதிரி ஒரு ஆளு சப்போர்ட்டுக்கு எனக்கு கிடைக்கவே கிடைக்காதுன்னு தெரிஞ்சும், எங்கப்பாவ பத்தி ( எல்லாருடைய அப்பாவும் தான்) கொஞ்சம் கூட பீல் பண்ணாத இந்த கேடு கேட்ட ஜென்மத்த என்ன சொல்றது..

அத நினைக்குற அளவுக்கு ஒரு மனித மனம் எனக்கு சீக்கிரம் வரணும்னு எனக்கு நானே prayer  பண்ணிக்கிறேன்...