May 21, 2011

ஓடிப்போனவன்...

வணக்கம்..

இக்கதையில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் நூறு சதவிகிதம் உண்மையே, கொஞ்சம் கூட கலப்படம் இல்லாத அக்மார்க் உண்மை கதை..

நம்ம கதையின் நாயகன் இருக்காரே, அவரு பேர ஓடிபோனவன்னே வெச்சுக்கலாம்..அவரு ஒரு MCA பட்டதாரி. அடிபடையில் இருந்து ஆரம்பித்து அமெரிக்கா வரை சென்று பணி புரிந்துள்ளார், கடவுள் பக்தி என்பது இந்த காலத்து யூத் (யூத்தா?) மத்தியில் இல்லை என்பதை தவிடு பொடியாக்க வந்தவர்,மேல் மாடி அதாவது மூளை அதிகம், எல்லாவற்றையும் தீர அலசி ஆராய்பவர், கடவுள் விஷயம் என்றால் எந்த எல்லைக்கும் செல்வார்.இப்போது Facebook ல அரசியல் பேசுறாங்களே சில பேர் அவங்களுக்கு முன்னாடில இருந்து இவரு தி.மு .க. பண்ண தப்புகள அங்க பதிவு பண்ணவர், எங்களுக்குள் நெறைய வாக்கு வாதங்களுக்கும் வித்திட்டவர், இப்படி பட்டவருக்கு ஏன் இந்த ஓடிப்போனவன் என்ற அவப்பெயர்...மேலும் அறிய... கீழே படியுங்கள்..

நான் இப்போ இருக்குற ஆண்கள் விடுதில ரெண்டாவது மாடில இருக்கேன், சார் நாலாவது மாடில இருந்தார், அவரு வந்த புதுசுலேயே கடவுள் எங்க 2 பேர் வாய்ல மாட்டிட்டு படாத பாடு பட்டாரு.திடீர்னு ஒரு நாள் காணாம போயிட்டாரு எங்கடான்னு விசாரிச்சா கனவு காணும் நாடான அமெரிக்கா போயிட்டாருன்னு சொன்னாங்க, ஒரு 6,7 மாசம் கழிச்சு திரும்பி வந்தாரு ஹைதராபாதுக்கே, வந்த உடனே நேரா நாலாவது மாடில இருந்தாரு...தனியா...என் வாய வெச்சுட்டு சும்மா இருக்க கூடாது...ஏன்யா இங்க தனியா தானே இருக்க அதுக்கு என் ரூமுக்கு வந்துருன்னே நானே வலிய பொய் கூப்டேன், தலைவன் வந்தான்..

எங்களுடைய ஒன்றாக இருக்கும் படலம் ஓரளவு அமைதியா தான் போயிட்டு இருந்துது, எது வரைக்கும்....சந்தீப் மற்றும் அருண் என்ற இரண்டு மலையாள மந்திரவாதிகள் எங்க நட்புக்குள்ள நுழையுற வரைக்கும்..இந்த 2 VIPs யாருன்னா நம்ம ஓடிப்போனவன் வேல செய்ற கம்பெனில புதுசா பொறியியல் படிப்பு முடிச்சிட்டு வந்த ஜூனியர் பய புள்ளைங்க..இந்த பாழா போன நேரத்துலயா என் பொறந்த நாள் வரணும்..அது வந்ததுனால நைட் 10.30 மணிக்கு இவனுங்க வந்தானுங்க..வாழ்த்து சொல்லன்னுமாமா...வாழ்த்து சொல்ல வந்துதுங்களே வாழ்த்திட்டு போகாம. எங்களுக்கு மலையாளம் தெரியும், மலையாள பிட்டு தெரியும், மாந்தரீகம் தெரியும்னு கத விட்டு முட்டை வைப்பது, எலுமிச்சை பழத்தில் மந்திரம் செய்வது, பொம்மையில் ஊசி குத்துவது போன்ற செயல்கள் எல்லாம் அவன்ட்ட சொன்னானுங்க, அதோட நிறுத்தாம உங்களுக்கு கெடைக்க வேண்டிய பெங்களூர் Transfer இப்போ எங்களால தான் நிக்குது, வேணும்னா என்ன கேளுங்கன்னு வேற ஊதி விட்டுட்டு போய்ட்டானுங்க பரதேசி பசங்க...இந்த கதைய இவனுங்க நைட் 11.30 மணிக்கு முடிசானுங்க அதுக்கப்புறம் அவன் 12.30 மணி வரைக்கும் நான் பேய் கிட்ட பேசினேன்னு சொன்னேனே நீ கேட்டியா , இவனுங்க தீய சக்தி,அடுத்த இலக்கு நீ தான், நான் கோவில்ல படிச்சிருக்கேன் அதனால இந்த தீயசக்தீங்கள நான் சமாளிச்சுப்பேன், ஆனா உனக்கு கடவுள் நம்பிக்கை வேற இல்லஅப்படினெல்லாம் சொன்னான். அந்த தீயசக்தி யாருன்னு சொல்டா நானாவது தப்பிசிக்குரேன் அப்படின்னு கேட்டா அவரு சொல்ல மாட்டாராம், சொன்னா அவர் உயிருக்கு ஆபத்தாம், என்னங்கடா இது..( இத சொல்லும்போது என் Basement கொஞ்சம் வீக் ஆச்சுன்னாலும் அவன் சொல்லும்போது காமெடியா இருந்துது சிரிச்சிட்டேன்)

இதுல ஆரம்பிசுதுயா போற எடமெல்லாம் அந்த 2 பேரும் எதாவது கனவுல பிரெண்ட் செத்து போனான் அது உண்மையிலேயே நடந்துது, சிவகாமின்னு ஒரு பொண்ணு சூப்பரா இருப்பா , `உங்க கதைய முடிச்சாச்சு`அப்படின்னு பல்ல கடிச்சிட்டு பேசுவானுங்க. இவனும் அவனுங்கள, டேய் இவனுங்க 2 பேரும் ``அதான் டா`` அப்படின்னு பீல் பண்ணுவான்..நடுவுல கொஞ்சம் அட்வைஸ் நடக்கும் எப்படின்னா அந்த பசங்க கிட்டே போய் இந்த சக்தி உனக்கு இருக்குறத யார் கிட்டயும் சொல்லாத...தப்பா யூஸ் பண்ணிருவாங்க...அப்படின்னு..( ஓடிப்போனவன் என்னை மன்னிக்கணும், அவங்கள இப்படி எல்லாம் பேசுங்கடான்னு சில விஷயத்த சொல்லி கொடுத்தது நான் தான்...)

ஆனா நம்ம பசங்க எப்படினா ரொம்ப ரொமாண்டிக் ரோமியோக்கள், ஒரே சமயத்துல 4,5 பிகர்கள ஓட்றது, ஒட்டின பிகர் கிட்டயே அடி வாங்குறது, இதுல கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத ஒரு பச்ச மண்ணை அதாவது என்ன இதுல இழுத்து விட்டு பஞ்சாயத்து பண்ண சொல்றது, அந்த பொண்ணு என்னடான்னா அண்ணன் சொன்னதுனால இல்லாட்டி உங்க கதைய முடிச்சிருவேன்னு பயமுறுத்துறது, லவ் பெய்லியர் ஆகி தோழி , கோழின்னு புக் எழுதுறதுன்னு, நைட் 11 வேலைக்கு போயிட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு வரதுன்னு இப்படி அவனுங்களே செய்வினை வெச்ச மாதிரி தான் அலைவானுங்க..அவனுங்க எங்க அடுத்தவனுக்கு செய்வினை வெக்குறது சொல்லுங்க...

அவரோட Facebook Profile போடோஸ் எல்லாத்தையும் பாத்தீங்கன்னா....மகா காளி, ஜோசியம் பாக்குறவன் இந்த Universal System போட்டோ வெச்சுருப்பானே அது, இப்படீன்னு Terror ஏற்படுத்துற புகைப்படங்கள் தான்..ஆத்திர அவசரத்துக்கு உதவும்னு அவரோட போடோஸ் ஒரு 2,3 காப்பி பண்ணி வெச்சுருந்தேன் இங்க போடலாம்னு பாத்தேன்..வேண்டாம்...( Latest Update: என்னையும் அந்த 2 பேரையும் Facebook பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருந்து தூக்கிட்டாரு..)

இதுக்கு நடுவுல எனக்கும் ஓடிப்போனவருக்கு அரசியல் பேச போய் அது சண்டைல முடிஞ்சுது, அப்பவும் தலைவன் டீசென்ட்டா தான் நடந்துகிட்டான்..என்ன அப்புறம் அவன் ரூமுக்குள்ள வரதே இல்ல, அவருடைய மடி கணினியை ஒரு நாளைக்கு குறைஞ்சது 15, 16 மணி நேரமாவது வேல வாங்கிட்டு அப்புறம் ஹால்ல தூங்குவாரு..(தூங்குவாரான்னு தெரில)... அந்த திறமைய அவர்ட்ட இருந்து வளத்துகனும்னு பாத்தேன் முடில..

நம்ம ஓடிப்போனவனுக்கு கடைசியா transfer கெடைச்சது, ஆனா அத யார் கிட்டயும் சொல்லாம காய்கறிகளை மட்டும் சாப்பிடும் இந்த மந்திரவாதி Gang ல இருக்குற ஒருத்தர் கிட்ட மட்டும் தான் சொல்லிருக்கான்,அவனுக்கு மட்டும் treat தரேன்னு நம்ம ஓடிப்போனவர் வாக்குறுதி கொடுத்திருக்கார்...அவன் இத எல்லார்கிட்டயும் அள்ளி தெளிசுட்டான்..கிட்ட தட்ட ஓடிப்போனவன் என்னைக்கு ஒடப்போரானு எங்களுக்கு தெரிஞ்சாலும், அவன் அத அவன் வாயல சொல்லவே இல்ல..Treat கேட்டதுக்கும் உங்களால நான் அனுபவிச்சது போதும், இதுல உங்களுக்கு Treat ஒரு கேடா..அப்படின்னு கேட்டு அசிங்க படுத்தி இருக்கான், மே 14, சனிக்கிழமை காலைல 7.15 கிட்டயும் நான் ஜிம் கெளம்பும்போது நல்லா தூங்கிட்டு இருந்தான்யா, 9.30 மணிக்கு வந்து பாக்குறேன் ரூம காலி பண்ணிட்டு போயட்டான்யா...

இப்படி அவன் மேல நாங்க பாச மழையா மொண்டு மொண்டு ஊத்தி இருக்கோம், அப்படியும் எங்க கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லாம எஸ்கேப் ஆயிட்டான்யா, இத்தனைக்கும் அவன் எல்லாத்தையும் மூட்ட கட்டும்போது..என்னுடைய இன்னொரு ரூம் மேட் அங்கேயே தான் இருந்துருக்கான், நம்மாளு ஓடிபோரதுல கவனமா இருந்தாரே தவிர, யார்கிட்டயும் சொல்லனும்னு அக்கறை இல்லாம போச்சேப்பா..

எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தும் மனம் எங்களுடையது, நீ இல்லாமல் இந்த ஹைதராபாத் நகரத்தில் இந்த விடுதியில் நாங்கள் கடத்தும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கஷ்டம் என்பதை நாம் மறுபடியும் நேரில் சந்திக்கும் போது கூறுகிறோம் ( மறுபடியும் சந்திக்கணுமா......)....

வாழ்க உன் நட்பு, வாழ்க உன் மனிதர்களை மதிக்கும் மாண்பு....

May 16, 2011

தோல்வி - நிரந்தரம் அல்ல....

வணக்கம்,

இந்த வலைதளத்த ஆரம்பிச்சப்போ என் நண்பன் இதுல அரசியல் எழுதனும்னு சொல்லி பிடிவாதமா இருந்தான், நான் தான் நாம பொழுது போக்குக்கு எழுதுறோம், தவிர கிண்டலும் கேலியா வேற எழுதுவோம், நம்ம எதிரி முகாம்ல கூட நம்ம நண்பர்கள் இருக்காங்க அவங்க மனசு புண்பட கூடாது, அதனால அரசியல் வேண்டாம்னு சொல்லியும், அவன் கொஞ்சம் எழுதினான், அப்படி சொன்ன என்னையும் இப்போ அரசியல் எழுத வெச்சுட்டாங்க...

இது எழுதுற நாள் 16\05\2011 அதாவது தமிழக சட்டசபை தேர்தல் முடிவு வந்து மூணு நாள் ஆச்சு..திடிர்னு ஒரு கும்பல் Facebook அப்படியே நீதிநேர்மைக்கு துணை போறவங்க மாதிரியும், வாழ்க்கைல `தப்பு` அப்படின்ற வார்த்தய காதால கூட கேட்டதில்லன்ற மாதிரியும் சில பல comments மற்றும் போடோஷோப் உபயோகபடுத்தி MUMMY RETURNS அப்படினெல்லாம் போட்ருந்தாங்க...மம்மி அப்படின்ன்ற விஷயத்துக்கு பதபடுத்திய பொனம்னு அர்த்தம் எகிப்து மொழியில.அது தான் நீங்க சொல்லவந்ததின் அர்த்தமா....

இதெல்லாம் ஏன்யா பண்றீங்கன்னு கேட்டா மாற்றம் வேணுமாம்,நடுநிலை அரசியலாம்..நடு நிலை அரசியல்னா..என்ன தெரியுமா உங்களுக்கு...Velachery அப்படின்னு ஒரு இடம் இருக்கு சென்னைல அங்க நின்னானே ஒரு ஏழை இட்லி வியாபாரியின், படித்து உயர்ந்த தொழிலதிபர் ஸ்தானத்தை அடைந்த மகன் சரத் பாபு அவருக்கு எத்தன பேர் ஒட்டு போட்டீங்க, இதே உங்க `அம்மா` முன்னாடி தமிழகத்தை ஆட்சி செஞ்சுட்டு இருந்தப்போ நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிச்சது, சட்டசபைக்கு போரேன்னு சொல்லி ஊரெல்லாம் டிராபிக் ஜாம் பண்ணப்போ அத எதிர்த்து வழக்கு போட்டு அடி வாங்கின டிராபிக் ராமசாமிக்கும், மேல சரத் பாபுவுக்கும் எத்தன பேர் ஆதரவு தெரிவிச்சு Facebook உங்க நடுநிலைய காமிசீங்கன்னு சொல்லுங்க...ஏன் இப்போவும் கொடனாட்ல 96 அறைகளோட சின்னதா ஒரு சின்ன வீடு இருக்கே, அது அந்த ஊரு சிறுபான்மையினருக்கு சொந்தம்னு கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்தினான்களே அதுக்கு யாரவது உங்க `நடுநிலைய மனசை` காமிசீன்களா, ராஜசேகரன் அப்படின்ற பேரு உங்க எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குன்னு தெரியாது, ஆனா அவர் தான் உங்க `அம்மாவோட` கணக்கு வழக்க பாத்துட்டு இருந்தவரு,அதாவது Auditor... அவர ஹீல்ஸ் செருப்பால அடிச்சு அவர் கண்ணு போனது உங்கள்ள எத்தன பேருக்கு தெரியும், அப்போ எங்க போச்சு உங்க நடுநாயக நிலைமை... இது இல்லாம பத்திரிகை நிருபர்கள் பேரணில ஆள விட்டு அடிச்சது..சங்கராச்சாரியார் கைது, ஹிந்து N.Ram ஓட ஓட வேரட்டினது, நக்கீரன் பத்திரிகைய அழிக்க நெனைச்சது, வைகோ பொடா சட்டத்துல கைது ஆனது.. நெறைய மேட்டர் இருக்கேப்பா..அதுகென்ன சொல்றீங்க..

மாற்றம் வேணும்னு சொல்றீங்க அப்புறம் ஏன் இவங்களுக்கு ஓட்டு போட்டீங்க, சுத்தமான அரசியல்வாதி, தன்மானத்தில் சிங்கம் அப்படீனெல்லாம் சொன்னீங்களே..வைகோ அவர அவங்க மரியாதை இல்லாம வெளில தள்ளினான்களே, அப்போ அவர தனியா நின்னா நாம ஜெயிக்கலாம்னு உங்க மேல நம்பிக்கை வெச்சு தேர்தல் நின்னு இருந்தா நீங்க Facebook காட்டின நடுநிலைய நான் கால்ல விழுந்து கொண்டாடி இருப்பேன்..

அடுத்து வடிவேலு, உங்க வீட்ல பத்தாவது, பன்னிரெண்டாவது படிக்கிற 2 பொன் குழந்தைங்க மேல ஒருத்தன் கல்லை விட்டு எரிஞ்சு 6,7 தையல் போடற மாதிரி ஆச்சுன்ன என்னையா பண்ணுவீங்க, அத தான்யா அந்தாளும் பண்ணான்,நம்மளுக்கும் வடிவேலுவுக்கும் ஒன்னும் பெரிய வித்யாசம் இல்ல ஒரே வித்யாசம் பணம் தான், மத்த படி இப்போ இருக்குற அரசியல் பலத்துக்கும் பண பலத்துக்கும் முன்னாடி 2 பேரும் டம்மி பீஸ் தான்..செரிங்க ஏன் அவரு அரசியல தன்னோட சொந்த வெறுப்புணர்ச்சிய காட்ட பயன்படுதினாருன்னு கேக்கலாம், உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க, அடையார்ல இருக்குற பாலம் ரொம்ப பலவீனமா இருக்கு கனரக வாகனங்கள் போகும்போது அதிருதுன்னு சொல்லி நடு ராத்திரில கைது பண்ணாங்களே. அது என்ன திருப்பதி வெங்கடாசலபதிக்கு வேண்டிகிட்டு செஞ்சதா...அந்த பாலத்த 1996 கட்டினாங்க என்னக்கு தெரிஞ்சு இப்போ வரைக்கு ஒரு விபத்து கூட அங்க நடக்கல, ஆனா கைது பண்ண முகமது அலி என்ன ஆனார்னு தெரில, அப்போதைய police commissioner Mr.முத்து கறுப்பன் எத்தன நாள் வேல இல்லாம வீட்ல உக்காந்தார்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா, அவருக்கு மறுபடியும் பதவி உயர்வு கொடுத்து திருப்பியும் பணியில சேர வெச்சது யாருன்னு தெரிலன்னா நீங்க இந்த நடுநிலை அரசியல பின்பற்றி பிரயோசனமே இல்ல.....அந்த கேஸ் என்னாச்சுன்னு நீங்க சொன்னீங்கன்னா கொஞ்சம் தேவலாம்...

அவ்ளோ தைரியசாலியா நீங்க இருந்தா...இந்த ஆட்சில நடக்குற தப்புகள, நீங்க வெளிப்படையா Facebook போட்டீங்கன்னா நீங்க உண்மையிலேயே தில்லான ஆள் தான்னு நாலு பேர் முன்னாடி உங்க கால்ல விழ நான் தயார், உங்க நடுநிலைமைய நான் அப்போ ஒத்துக்குறேன்…..தி.மு.. எதிரா தான் ஒட்டு போட்ருக்காங்களே தவிர யாரும் இந்த கட்சி தான் அதுக்கு செரியான மாற்றுன்னு ஒட்டு போடல புரிஞ்சிக்கோங்க..

2G, சினிமா ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, வாரிசு அரசியல்,.ராசா, கனிமொழி இப்படி என்ன காரணம் வேணா சொல்லுங்க, ஏன்ன நீங்க அத்தன பேரும் டெல்லி நியூஸ் சேனல்ஸ் சொல்றத நம்புறவங்க.ஆனா நடுநிலை அரசியல், மாற்றம் தேவைநேல்லாம் தயவு செஞ்சு உளறி கொட்டாதீங்க...

தன் ஏரியாவோட பின்கோடு தெரியாதவன், வீட்டுக்கு எதிர ரயில் நிலையம் இருக்கிறது தெரியாதவன், மொத்ததுல ஒண்ணுமே தெரியாதவனுகெல்லாம் இந்த நடுநிலை, மாற்றம் தேவை வசன அரசியல்ல பங்கு இருக்கு..சில நடுநிலைவாதிகள் இப்போ அவங்களோட NSS போடோஸ் அப்புறம் வெளியூர் போன புகைப்படங்களை போட்டுட்டு இருக்காங்க, முடிஞ்சுது அவங்க அரசியல் ஆர்வம்..

வெள்ளி கிழமை result வந்துது...உங்களுக்கு வீகென்ட் டைம் பாஸ் ஆச்சு..வடிவேலுவ கிண்டல் பண்ணி வீடியோ, கலைஞருக்கு நாமம் போட்டு போட்டோ, அவ்ளோ தான் வீக் எண்டு முடிஞ்சுது, நீங்களும் அடுத்த வேலைய பாக்கணும இல்லையா, ஒன்னும் அவசரம் இல்ல இதோட நீங்க எல்லாரும் 2016 திருப்பியும் தேர்தல் வரும் அப்போ Facebook இல்லனா Handbook எதாவது புதுசா வந்துருக்கும்...அப்போ நீங்க உங்க பழயபடி மக்கள் அவதி படறாங்க, மாற்றம் தேவை, அப்படின்னு உங்க நடுநிலைமை வசனங்களை பேசலாம். இதையெல்லாம் யார் பாக்க போறா..என்ன சொல்றீங்க..

கடைசியா ஒன்னு, இவ்வளவு facebook update கொடுத்த நீங்க ஏன் ரோட்ல எறங்கி பிரச்சாரம் பண்ணிருக்க கூடாது, அவனுக்கு போடாதயா...இவங்களுக்கு போடுங்கய்யன்னு, அவ்வளவு தில் இருந்தா நீங்க அத பண்ணிருக்கலாமே, ஏன்யா April 13 இருந்து May 13 வரைக்கும் ஒரு மாசம் கேப் இருந்துதுதேயா, அப்போ நீங்க முகமண்டலத்துல உங்க பதிவ போற்றுக்கலாமே நடுநிலை வாதிகளா....எங்கயா போச்சு உங்க வீரம் அப்போ, இப்படி result வந்த பிறகு நான் ஜெயிச்ச கட்சின்னு சொல்றதுக்கு என்ன மாதிரி அப்புறமா நான் தோத்தவன் கட்சின்னு சொல்லலாம், இப்படி எல்லாம் முடிஞ்ச பிறகு Facebook வீரத்த காட்டுற உங்களுக்கும்..Result வந்த அடுத்த நாளே தன்னோட வேலாயுதம் படத்த ஜெயா டிவிக்கு கொடுத்த இளையதளபதி டாக்டர் விஜய்க்கும் ஒரு பெரிய வித்யாசம் இல்ல...2 பேரும் Result வந்த பிறகு தான்உங்க வீரத்தையும் காட்டுனீங்க, மாற்றம் வேணும்னு உங்க திருவாய் மலர்ந்தீங்க, நாங்க புல்லரிச்சு போனோம்....

WE NEED A CHANGE
நு சொல்லிட்டு ஒருத்தர் பதவி எத்துகிட்டார் ஞாபகம் இருக்குங்களா உங்களுக்கு…., அதே மாற்றம் இங்கேயும் நடக்கும் பாருங்க....

வாழ்க உங்கள் நடுநிலைமை, வாழ்க உங்கள் மாற்றம் தேவை வசனம்...

ஜெய் ஹிந்த்...

May 21, 2011

ஓடிப்போனவன்...

வணக்கம்..

இக்கதையில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் நூறு சதவிகிதம் உண்மையே, கொஞ்சம் கூட கலப்படம் இல்லாத அக்மார்க் உண்மை கதை..

நம்ம கதையின் நாயகன் இருக்காரே, அவரு பேர ஓடிபோனவன்னே வெச்சுக்கலாம்..அவரு ஒரு MCA பட்டதாரி. அடிபடையில் இருந்து ஆரம்பித்து அமெரிக்கா வரை சென்று பணி புரிந்துள்ளார், கடவுள் பக்தி என்பது இந்த காலத்து யூத் (யூத்தா?) மத்தியில் இல்லை என்பதை தவிடு பொடியாக்க வந்தவர்,மேல் மாடி அதாவது மூளை அதிகம், எல்லாவற்றையும் தீர அலசி ஆராய்பவர், கடவுள் விஷயம் என்றால் எந்த எல்லைக்கும் செல்வார்.இப்போது Facebook ல அரசியல் பேசுறாங்களே சில பேர் அவங்களுக்கு முன்னாடில இருந்து இவரு தி.மு .க. பண்ண தப்புகள அங்க பதிவு பண்ணவர், எங்களுக்குள் நெறைய வாக்கு வாதங்களுக்கும் வித்திட்டவர், இப்படி பட்டவருக்கு ஏன் இந்த ஓடிப்போனவன் என்ற அவப்பெயர்...மேலும் அறிய... கீழே படியுங்கள்..

நான் இப்போ இருக்குற ஆண்கள் விடுதில ரெண்டாவது மாடில இருக்கேன், சார் நாலாவது மாடில இருந்தார், அவரு வந்த புதுசுலேயே கடவுள் எங்க 2 பேர் வாய்ல மாட்டிட்டு படாத பாடு பட்டாரு.திடீர்னு ஒரு நாள் காணாம போயிட்டாரு எங்கடான்னு விசாரிச்சா கனவு காணும் நாடான அமெரிக்கா போயிட்டாருன்னு சொன்னாங்க, ஒரு 6,7 மாசம் கழிச்சு திரும்பி வந்தாரு ஹைதராபாதுக்கே, வந்த உடனே நேரா நாலாவது மாடில இருந்தாரு...தனியா...என் வாய வெச்சுட்டு சும்மா இருக்க கூடாது...ஏன்யா இங்க தனியா தானே இருக்க அதுக்கு என் ரூமுக்கு வந்துருன்னே நானே வலிய பொய் கூப்டேன், தலைவன் வந்தான்..

எங்களுடைய ஒன்றாக இருக்கும் படலம் ஓரளவு அமைதியா தான் போயிட்டு இருந்துது, எது வரைக்கும்....சந்தீப் மற்றும் அருண் என்ற இரண்டு மலையாள மந்திரவாதிகள் எங்க நட்புக்குள்ள நுழையுற வரைக்கும்..இந்த 2 VIPs யாருன்னா நம்ம ஓடிப்போனவன் வேல செய்ற கம்பெனில புதுசா பொறியியல் படிப்பு முடிச்சிட்டு வந்த ஜூனியர் பய புள்ளைங்க..இந்த பாழா போன நேரத்துலயா என் பொறந்த நாள் வரணும்..அது வந்ததுனால நைட் 10.30 மணிக்கு இவனுங்க வந்தானுங்க..வாழ்த்து சொல்லன்னுமாமா...வாழ்த்து சொல்ல வந்துதுங்களே வாழ்த்திட்டு போகாம. எங்களுக்கு மலையாளம் தெரியும், மலையாள பிட்டு தெரியும், மாந்தரீகம் தெரியும்னு கத விட்டு முட்டை வைப்பது, எலுமிச்சை பழத்தில் மந்திரம் செய்வது, பொம்மையில் ஊசி குத்துவது போன்ற செயல்கள் எல்லாம் அவன்ட்ட சொன்னானுங்க, அதோட நிறுத்தாம உங்களுக்கு கெடைக்க வேண்டிய பெங்களூர் Transfer இப்போ எங்களால தான் நிக்குது, வேணும்னா என்ன கேளுங்கன்னு வேற ஊதி விட்டுட்டு போய்ட்டானுங்க பரதேசி பசங்க...இந்த கதைய இவனுங்க நைட் 11.30 மணிக்கு முடிசானுங்க அதுக்கப்புறம் அவன் 12.30 மணி வரைக்கும் நான் பேய் கிட்ட பேசினேன்னு சொன்னேனே நீ கேட்டியா , இவனுங்க தீய சக்தி,அடுத்த இலக்கு நீ தான், நான் கோவில்ல படிச்சிருக்கேன் அதனால இந்த தீயசக்தீங்கள நான் சமாளிச்சுப்பேன், ஆனா உனக்கு கடவுள் நம்பிக்கை வேற இல்லஅப்படினெல்லாம் சொன்னான். அந்த தீயசக்தி யாருன்னு சொல்டா நானாவது தப்பிசிக்குரேன் அப்படின்னு கேட்டா அவரு சொல்ல மாட்டாராம், சொன்னா அவர் உயிருக்கு ஆபத்தாம், என்னங்கடா இது..( இத சொல்லும்போது என் Basement கொஞ்சம் வீக் ஆச்சுன்னாலும் அவன் சொல்லும்போது காமெடியா இருந்துது சிரிச்சிட்டேன்)

இதுல ஆரம்பிசுதுயா போற எடமெல்லாம் அந்த 2 பேரும் எதாவது கனவுல பிரெண்ட் செத்து போனான் அது உண்மையிலேயே நடந்துது, சிவகாமின்னு ஒரு பொண்ணு சூப்பரா இருப்பா , `உங்க கதைய முடிச்சாச்சு`அப்படின்னு பல்ல கடிச்சிட்டு பேசுவானுங்க. இவனும் அவனுங்கள, டேய் இவனுங்க 2 பேரும் ``அதான் டா`` அப்படின்னு பீல் பண்ணுவான்..நடுவுல கொஞ்சம் அட்வைஸ் நடக்கும் எப்படின்னா அந்த பசங்க கிட்டே போய் இந்த சக்தி உனக்கு இருக்குறத யார் கிட்டயும் சொல்லாத...தப்பா யூஸ் பண்ணிருவாங்க...அப்படின்னு..( ஓடிப்போனவன் என்னை மன்னிக்கணும், அவங்கள இப்படி எல்லாம் பேசுங்கடான்னு சில விஷயத்த சொல்லி கொடுத்தது நான் தான்...)

ஆனா நம்ம பசங்க எப்படினா ரொம்ப ரொமாண்டிக் ரோமியோக்கள், ஒரே சமயத்துல 4,5 பிகர்கள ஓட்றது, ஒட்டின பிகர் கிட்டயே அடி வாங்குறது, இதுல கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத ஒரு பச்ச மண்ணை அதாவது என்ன இதுல இழுத்து விட்டு பஞ்சாயத்து பண்ண சொல்றது, அந்த பொண்ணு என்னடான்னா அண்ணன் சொன்னதுனால இல்லாட்டி உங்க கதைய முடிச்சிருவேன்னு பயமுறுத்துறது, லவ் பெய்லியர் ஆகி தோழி , கோழின்னு புக் எழுதுறதுன்னு, நைட் 11 வேலைக்கு போயிட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு வரதுன்னு இப்படி அவனுங்களே செய்வினை வெச்ச மாதிரி தான் அலைவானுங்க..அவனுங்க எங்க அடுத்தவனுக்கு செய்வினை வெக்குறது சொல்லுங்க...

அவரோட Facebook Profile போடோஸ் எல்லாத்தையும் பாத்தீங்கன்னா....மகா காளி, ஜோசியம் பாக்குறவன் இந்த Universal System போட்டோ வெச்சுருப்பானே அது, இப்படீன்னு Terror ஏற்படுத்துற புகைப்படங்கள் தான்..ஆத்திர அவசரத்துக்கு உதவும்னு அவரோட போடோஸ் ஒரு 2,3 காப்பி பண்ணி வெச்சுருந்தேன் இங்க போடலாம்னு பாத்தேன்..வேண்டாம்...( Latest Update: என்னையும் அந்த 2 பேரையும் Facebook பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருந்து தூக்கிட்டாரு..)

இதுக்கு நடுவுல எனக்கும் ஓடிப்போனவருக்கு அரசியல் பேச போய் அது சண்டைல முடிஞ்சுது, அப்பவும் தலைவன் டீசென்ட்டா தான் நடந்துகிட்டான்..என்ன அப்புறம் அவன் ரூமுக்குள்ள வரதே இல்ல, அவருடைய மடி கணினியை ஒரு நாளைக்கு குறைஞ்சது 15, 16 மணி நேரமாவது வேல வாங்கிட்டு அப்புறம் ஹால்ல தூங்குவாரு..(தூங்குவாரான்னு தெரில)... அந்த திறமைய அவர்ட்ட இருந்து வளத்துகனும்னு பாத்தேன் முடில..

நம்ம ஓடிப்போனவனுக்கு கடைசியா transfer கெடைச்சது, ஆனா அத யார் கிட்டயும் சொல்லாம காய்கறிகளை மட்டும் சாப்பிடும் இந்த மந்திரவாதி Gang ல இருக்குற ஒருத்தர் கிட்ட மட்டும் தான் சொல்லிருக்கான்,அவனுக்கு மட்டும் treat தரேன்னு நம்ம ஓடிப்போனவர் வாக்குறுதி கொடுத்திருக்கார்...அவன் இத எல்லார்கிட்டயும் அள்ளி தெளிசுட்டான்..கிட்ட தட்ட ஓடிப்போனவன் என்னைக்கு ஒடப்போரானு எங்களுக்கு தெரிஞ்சாலும், அவன் அத அவன் வாயல சொல்லவே இல்ல..Treat கேட்டதுக்கும் உங்களால நான் அனுபவிச்சது போதும், இதுல உங்களுக்கு Treat ஒரு கேடா..அப்படின்னு கேட்டு அசிங்க படுத்தி இருக்கான், மே 14, சனிக்கிழமை காலைல 7.15 கிட்டயும் நான் ஜிம் கெளம்பும்போது நல்லா தூங்கிட்டு இருந்தான்யா, 9.30 மணிக்கு வந்து பாக்குறேன் ரூம காலி பண்ணிட்டு போயட்டான்யா...

இப்படி அவன் மேல நாங்க பாச மழையா மொண்டு மொண்டு ஊத்தி இருக்கோம், அப்படியும் எங்க கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லாம எஸ்கேப் ஆயிட்டான்யா, இத்தனைக்கும் அவன் எல்லாத்தையும் மூட்ட கட்டும்போது..என்னுடைய இன்னொரு ரூம் மேட் அங்கேயே தான் இருந்துருக்கான், நம்மாளு ஓடிபோரதுல கவனமா இருந்தாரே தவிர, யார்கிட்டயும் சொல்லனும்னு அக்கறை இல்லாம போச்சேப்பா..

எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தும் மனம் எங்களுடையது, நீ இல்லாமல் இந்த ஹைதராபாத் நகரத்தில் இந்த விடுதியில் நாங்கள் கடத்தும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கஷ்டம் என்பதை நாம் மறுபடியும் நேரில் சந்திக்கும் போது கூறுகிறோம் ( மறுபடியும் சந்திக்கணுமா......)....

வாழ்க உன் நட்பு, வாழ்க உன் மனிதர்களை மதிக்கும் மாண்பு....

May 16, 2011

தோல்வி - நிரந்தரம் அல்ல....

வணக்கம்,

இந்த வலைதளத்த ஆரம்பிச்சப்போ என் நண்பன் இதுல அரசியல் எழுதனும்னு சொல்லி பிடிவாதமா இருந்தான், நான் தான் நாம பொழுது போக்குக்கு எழுதுறோம், தவிர கிண்டலும் கேலியா வேற எழுதுவோம், நம்ம எதிரி முகாம்ல கூட நம்ம நண்பர்கள் இருக்காங்க அவங்க மனசு புண்பட கூடாது, அதனால அரசியல் வேண்டாம்னு சொல்லியும், அவன் கொஞ்சம் எழுதினான், அப்படி சொன்ன என்னையும் இப்போ அரசியல் எழுத வெச்சுட்டாங்க...

இது எழுதுற நாள் 16\05\2011 அதாவது தமிழக சட்டசபை தேர்தல் முடிவு வந்து மூணு நாள் ஆச்சு..திடிர்னு ஒரு கும்பல் Facebook அப்படியே நீதிநேர்மைக்கு துணை போறவங்க மாதிரியும், வாழ்க்கைல `தப்பு` அப்படின்ற வார்த்தய காதால கூட கேட்டதில்லன்ற மாதிரியும் சில பல comments மற்றும் போடோஷோப் உபயோகபடுத்தி MUMMY RETURNS அப்படினெல்லாம் போட்ருந்தாங்க...மம்மி அப்படின்ன்ற விஷயத்துக்கு பதபடுத்திய பொனம்னு அர்த்தம் எகிப்து மொழியில.அது தான் நீங்க சொல்லவந்ததின் அர்த்தமா....

இதெல்லாம் ஏன்யா பண்றீங்கன்னு கேட்டா மாற்றம் வேணுமாம்,நடுநிலை அரசியலாம்..நடு நிலை அரசியல்னா..என்ன தெரியுமா உங்களுக்கு...Velachery அப்படின்னு ஒரு இடம் இருக்கு சென்னைல அங்க நின்னானே ஒரு ஏழை இட்லி வியாபாரியின், படித்து உயர்ந்த தொழிலதிபர் ஸ்தானத்தை அடைந்த மகன் சரத் பாபு அவருக்கு எத்தன பேர் ஒட்டு போட்டீங்க, இதே உங்க `அம்மா` முன்னாடி தமிழகத்தை ஆட்சி செஞ்சுட்டு இருந்தப்போ நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிச்சது, சட்டசபைக்கு போரேன்னு சொல்லி ஊரெல்லாம் டிராபிக் ஜாம் பண்ணப்போ அத எதிர்த்து வழக்கு போட்டு அடி வாங்கின டிராபிக் ராமசாமிக்கும், மேல சரத் பாபுவுக்கும் எத்தன பேர் ஆதரவு தெரிவிச்சு Facebook உங்க நடுநிலைய காமிசீங்கன்னு சொல்லுங்க...ஏன் இப்போவும் கொடனாட்ல 96 அறைகளோட சின்னதா ஒரு சின்ன வீடு இருக்கே, அது அந்த ஊரு சிறுபான்மையினருக்கு சொந்தம்னு கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்தினான்களே அதுக்கு யாரவது உங்க `நடுநிலைய மனசை` காமிசீன்களா, ராஜசேகரன் அப்படின்ற பேரு உங்க எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குன்னு தெரியாது, ஆனா அவர் தான் உங்க `அம்மாவோட` கணக்கு வழக்க பாத்துட்டு இருந்தவரு,அதாவது Auditor... அவர ஹீல்ஸ் செருப்பால அடிச்சு அவர் கண்ணு போனது உங்கள்ள எத்தன பேருக்கு தெரியும், அப்போ எங்க போச்சு உங்க நடுநாயக நிலைமை... இது இல்லாம பத்திரிகை நிருபர்கள் பேரணில ஆள விட்டு அடிச்சது..சங்கராச்சாரியார் கைது, ஹிந்து N.Ram ஓட ஓட வேரட்டினது, நக்கீரன் பத்திரிகைய அழிக்க நெனைச்சது, வைகோ பொடா சட்டத்துல கைது ஆனது.. நெறைய மேட்டர் இருக்கேப்பா..அதுகென்ன சொல்றீங்க..

மாற்றம் வேணும்னு சொல்றீங்க அப்புறம் ஏன் இவங்களுக்கு ஓட்டு போட்டீங்க, சுத்தமான அரசியல்வாதி, தன்மானத்தில் சிங்கம் அப்படீனெல்லாம் சொன்னீங்களே..வைகோ அவர அவங்க மரியாதை இல்லாம வெளில தள்ளினான்களே, அப்போ அவர தனியா நின்னா நாம ஜெயிக்கலாம்னு உங்க மேல நம்பிக்கை வெச்சு தேர்தல் நின்னு இருந்தா நீங்க Facebook காட்டின நடுநிலைய நான் கால்ல விழுந்து கொண்டாடி இருப்பேன்..

அடுத்து வடிவேலு, உங்க வீட்ல பத்தாவது, பன்னிரெண்டாவது படிக்கிற 2 பொன் குழந்தைங்க மேல ஒருத்தன் கல்லை விட்டு எரிஞ்சு 6,7 தையல் போடற மாதிரி ஆச்சுன்ன என்னையா பண்ணுவீங்க, அத தான்யா அந்தாளும் பண்ணான்,நம்மளுக்கும் வடிவேலுவுக்கும் ஒன்னும் பெரிய வித்யாசம் இல்ல ஒரே வித்யாசம் பணம் தான், மத்த படி இப்போ இருக்குற அரசியல் பலத்துக்கும் பண பலத்துக்கும் முன்னாடி 2 பேரும் டம்மி பீஸ் தான்..செரிங்க ஏன் அவரு அரசியல தன்னோட சொந்த வெறுப்புணர்ச்சிய காட்ட பயன்படுதினாருன்னு கேக்கலாம், உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க, அடையார்ல இருக்குற பாலம் ரொம்ப பலவீனமா இருக்கு கனரக வாகனங்கள் போகும்போது அதிருதுன்னு சொல்லி நடு ராத்திரில கைது பண்ணாங்களே. அது என்ன திருப்பதி வெங்கடாசலபதிக்கு வேண்டிகிட்டு செஞ்சதா...அந்த பாலத்த 1996 கட்டினாங்க என்னக்கு தெரிஞ்சு இப்போ வரைக்கு ஒரு விபத்து கூட அங்க நடக்கல, ஆனா கைது பண்ண முகமது அலி என்ன ஆனார்னு தெரில, அப்போதைய police commissioner Mr.முத்து கறுப்பன் எத்தன நாள் வேல இல்லாம வீட்ல உக்காந்தார்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா, அவருக்கு மறுபடியும் பதவி உயர்வு கொடுத்து திருப்பியும் பணியில சேர வெச்சது யாருன்னு தெரிலன்னா நீங்க இந்த நடுநிலை அரசியல பின்பற்றி பிரயோசனமே இல்ல.....அந்த கேஸ் என்னாச்சுன்னு நீங்க சொன்னீங்கன்னா கொஞ்சம் தேவலாம்...

அவ்ளோ தைரியசாலியா நீங்க இருந்தா...இந்த ஆட்சில நடக்குற தப்புகள, நீங்க வெளிப்படையா Facebook போட்டீங்கன்னா நீங்க உண்மையிலேயே தில்லான ஆள் தான்னு நாலு பேர் முன்னாடி உங்க கால்ல விழ நான் தயார், உங்க நடுநிலைமைய நான் அப்போ ஒத்துக்குறேன்…..தி.மு.. எதிரா தான் ஒட்டு போட்ருக்காங்களே தவிர யாரும் இந்த கட்சி தான் அதுக்கு செரியான மாற்றுன்னு ஒட்டு போடல புரிஞ்சிக்கோங்க..

2G, சினிமா ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, வாரிசு அரசியல்,.ராசா, கனிமொழி இப்படி என்ன காரணம் வேணா சொல்லுங்க, ஏன்ன நீங்க அத்தன பேரும் டெல்லி நியூஸ் சேனல்ஸ் சொல்றத நம்புறவங்க.ஆனா நடுநிலை அரசியல், மாற்றம் தேவைநேல்லாம் தயவு செஞ்சு உளறி கொட்டாதீங்க...

தன் ஏரியாவோட பின்கோடு தெரியாதவன், வீட்டுக்கு எதிர ரயில் நிலையம் இருக்கிறது தெரியாதவன், மொத்ததுல ஒண்ணுமே தெரியாதவனுகெல்லாம் இந்த நடுநிலை, மாற்றம் தேவை வசன அரசியல்ல பங்கு இருக்கு..சில நடுநிலைவாதிகள் இப்போ அவங்களோட NSS போடோஸ் அப்புறம் வெளியூர் போன புகைப்படங்களை போட்டுட்டு இருக்காங்க, முடிஞ்சுது அவங்க அரசியல் ஆர்வம்..

வெள்ளி கிழமை result வந்துது...உங்களுக்கு வீகென்ட் டைம் பாஸ் ஆச்சு..வடிவேலுவ கிண்டல் பண்ணி வீடியோ, கலைஞருக்கு நாமம் போட்டு போட்டோ, அவ்ளோ தான் வீக் எண்டு முடிஞ்சுது, நீங்களும் அடுத்த வேலைய பாக்கணும இல்லையா, ஒன்னும் அவசரம் இல்ல இதோட நீங்க எல்லாரும் 2016 திருப்பியும் தேர்தல் வரும் அப்போ Facebook இல்லனா Handbook எதாவது புதுசா வந்துருக்கும்...அப்போ நீங்க உங்க பழயபடி மக்கள் அவதி படறாங்க, மாற்றம் தேவை, அப்படின்னு உங்க நடுநிலைமை வசனங்களை பேசலாம். இதையெல்லாம் யார் பாக்க போறா..என்ன சொல்றீங்க..

கடைசியா ஒன்னு, இவ்வளவு facebook update கொடுத்த நீங்க ஏன் ரோட்ல எறங்கி பிரச்சாரம் பண்ணிருக்க கூடாது, அவனுக்கு போடாதயா...இவங்களுக்கு போடுங்கய்யன்னு, அவ்வளவு தில் இருந்தா நீங்க அத பண்ணிருக்கலாமே, ஏன்யா April 13 இருந்து May 13 வரைக்கும் ஒரு மாசம் கேப் இருந்துதுதேயா, அப்போ நீங்க முகமண்டலத்துல உங்க பதிவ போற்றுக்கலாமே நடுநிலை வாதிகளா....எங்கயா போச்சு உங்க வீரம் அப்போ, இப்படி result வந்த பிறகு நான் ஜெயிச்ச கட்சின்னு சொல்றதுக்கு என்ன மாதிரி அப்புறமா நான் தோத்தவன் கட்சின்னு சொல்லலாம், இப்படி எல்லாம் முடிஞ்ச பிறகு Facebook வீரத்த காட்டுற உங்களுக்கும்..Result வந்த அடுத்த நாளே தன்னோட வேலாயுதம் படத்த ஜெயா டிவிக்கு கொடுத்த இளையதளபதி டாக்டர் விஜய்க்கும் ஒரு பெரிய வித்யாசம் இல்ல...2 பேரும் Result வந்த பிறகு தான்உங்க வீரத்தையும் காட்டுனீங்க, மாற்றம் வேணும்னு உங்க திருவாய் மலர்ந்தீங்க, நாங்க புல்லரிச்சு போனோம்....

WE NEED A CHANGE
நு சொல்லிட்டு ஒருத்தர் பதவி எத்துகிட்டார் ஞாபகம் இருக்குங்களா உங்களுக்கு…., அதே மாற்றம் இங்கேயும் நடக்கும் பாருங்க....

வாழ்க உங்கள் நடுநிலைமை, வாழ்க உங்கள் மாற்றம் தேவை வசனம்...

ஜெய் ஹிந்த்...