June 17, 2009

2011 இல் தமிழக முதல்வர் யாரு? அவருக்கு என்ன பேரு?

வணக்கம்,

இந்த கேள்வி ரொம்ப பேருக்கு ரொம்ப நாளா மனசுக்குள்ளயே கேட்டுட்டு இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.

60 வருஷமா அரசியல்ல இருக்க கலைஞர்ல இருந்து 6 மாசத்துக்கு முன்னாடி கட்சி ஆரம்பிச்ச கார்த்திக் வெரைக்கும்சொல்ற விஷயம் 2011 இல் நான் தான் தமிழக முதல்வர்.

எப்படி இவங்க எல்லாரும், எந்த அடிப்படைல இந்த விஷயத்த சொல்றாங்கன்னு தெரில. செரி நாம நம்ம விஷயத்துக்கு வருவோம். இப்படி 2011 இல் முதல்வர் நான் தான் சொல்ற கூட்டத்தோட இன்னொருத்தர் சேர போறாரு.

அவருக்கு அறிமுகம் ரொம்ப தேவ இல்ல. தமிழ் நாட்டுல இருக்குற மிக சிறந்த "நடிகர்கள்" அப்படின்னு ஒரு பட்டியல் போட்டா அதுல சார் பேர் தான் முதல் வரிசையில இருக்கும். நடிப்புல மர்லன் ப்ரண்டோவ மிஞ்சினவரு. ஸ்டைல் ல அழ பாசினோ வா மிஞ்சினவரு. அக்ஷன் ல அர்ணல்ட மிஞ்சினவருன்னு இப்படி பல பெற பின்னுக்கு தள்ளி இனிமே பின்னுக்கு தள்ள ஆளே இல்லாத ஒப்பற்ற நடிகர்.
அவர் ஏற்காத கதாபாத்திரங்களே கெடயாது.( தூ....) ,போடாத கெட் அப்பே இல்ல ( கர்மம்).தன்னோட பொறந்த நாளான ஜூன் 22 அம தேதி தனது அரசியல் பிரவேசத்த அறிவிக்கரத இருக்காரு. "நேற்றைய தொண்டன் இன்றைய தலைவன் இன்றைய தொண்டன் நாளைய தலைவன்" இப்படி ஒரு போன்மொழிய உதிர்த்த பொன்மன செம்மல்.

முன்னாடி என்னோட தலைவன் சூப்பர் ஸ்டார்னு சொல்லிட்டு திரிஞ்சாரு, இப்போ திடீர்னு எம்.ஜி.ஆர்ர். ஓட தீவிர ரசிகர தன்ன சித்தரிக்க விரும்புராறு.
அது எதுக்குன்னுதான் தெரில.

இவர் யாரு, இவ்ளோ உயர்ந்த பண்புகள் உள்ள இந்த பண்பாளன் யாரு அப்படின்ற கேள்வி உங்களுக்கு வரும்.பதில் இதோ. அவர் இதய தளபதி,இனிய தளபதி,இளைய தளபதி டாக்டர் விஜய்.

நடிப்புல பல சாதனைகள முறியடிசுட்டு இனிமே முறியடிக்க ஒரு சாதனை கூட இல்லாததால இப்போ அரசியல்ல எறங்கி மக்களுக்கு " சேவை " செய்யலாம்னு முடிவு எடுடுருக்காரு நம்ம நடிப்பு புயல். கடைசியா அவர் நடிச்ச 3 கலை காவியங்களான அழகிய தமிழ் மகன்,குருவி மற்றும் வில்லு ஆகிய படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றி பெற்றதால அவருக்கு என்ன கேரக்டர் இனிமே கொடுக்கலாம்னு தமிழ் திரை உலகமே தலை சுத்தி கீழே உழுந்து கெடக்குது.மணிரத்னம் , ஷங்கரெல்லாம் ஊற ஓடிட்டத கேள்வி. இப்போ வேட்டைக்காரன் அப்படின்னு ஒரு புதுமையான படத்தில நடிச்சிட்டு இருக்காரு.

இதெலாம் முடிச்ச பிறகு உங்க உண்மை தொண்டன். அஞ்சா நெஞ்சன், மக்களுக்காக அல்லும் பகலும் அயராது பாடு பட வருகிறார் வருகிறார் உங்கள் இளைய தளபதி.

இது நடிச்சு சேவை புரிஞ்சதுல அவர் அவ்ளோ சொத்து எதுவும் சேக்கலீங்க. என்ன வடபழனி பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல சஞ்சய் திருமண மண்டபமும், SSR பங்கஜம் திரை அரங்கு எதிர்ல ஷோபா கல்யாண மண்டபமும்அப்புறம் போருர்ல ஒன்னு, வடபழனில 2 வீடு. நீலாங்கரைல 2 வீடு icici பேங்க் ஷேர் நு அப்புறம் அவரோட " 200 நாள் ஓடின வெற்றி படங்களுக்கு " வாங்குற சம்பளம் இப்படி அவர் செர்த்துருக்க சொத்து ரொம்ப கம்மி. அதனாலேயே அவர் அரசியலுக்கு வரலாம்.

சின்ன வயசுலேர்ந்து ரொம்ப "கஷ்டப்பட்டு" வளர்ந்தவர்னு அவரே சொல்றாரு என்ன கஷ்ட பட்டாருன்றது அவருக்கு தான் வெளிச்சம்.சினிமா la நடிக்க வெக்க அவங்கப்பா ஒத்துகாததலா உதயம் திரியாரைங்கில் உண்ணாவிரதம் இருந்து சாதிச்சத பெருமையா குங்குமம் பத்திரிகைல பகிர்ந்துகிட்டாறு நம்ம இளைய தளபதி. அவ்ங்கப்பவ மொதல்ல அடிக்கணும் உண்ணாவிரதம் இருந்தப்ப அப்படியே போகட்டும்னு விடாம நடிக்க வெச்சு இப்போ பல பேரோட கழுத்த அருக்குராறு நம்ம டாக்டர்.

இப்போவே அவரோட தேர்தல் அறிகைலாம் பாக்க எங்களுக்கு பயங்கர ஆர்வமா இருக்குது. படத்துலலாம் எப்படி பஞ்ச் டயலாக் பேசுறாரு அதே மாதிரி மீட்டிங்ல பெசுவார்ல அத பாத்து கை கொட்டி சாரி கை தட்டி சிரிக்கலாம்ல. இன்னும் நாம என்னன்னா கொடுமையெல்லாம் அனுபவிக்கணும்னு இருக்குன்னு தெரிலையே.
பாப்போம் அதான் நம்ம தலைஎழுத்துனு இருந்தா யாரால மாத்த முடியும்.
கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிட்டு முடிச்சிடறேன்.

உழைத்திடு, உயர்ந்திடு, உன்னால் முடியும் இது நான் சொல்லங்க நம்ம தளபதியோட கொடில இதான் இருக்குது...

வாழ்க ஜனநாயகம்.....................

June 10, 2009

ரோதனை சாரி தோரணை

நம்ம புரட்சி தளபதி விஷால் நடிச்சு இப்போ வெளி வந்து " வெற்றிகரமா " "ஓடிட்டு " இருக்க தோரணை பத்தின சிறப்பு அம்சங்கல இப்போ நாம பாக்க போறோம் .

அம்சம் ஒன்னு : புரட்சி தளபதி பட்டத்த வாங்கின பிறகு வர மூணாவது படம் தோரணை.

அம்சம் ரெண்டு : காணாம போன அண்ணன இருவத்தி அஞ்சு வருஷம் கழிச்சு கண்டு பிடிக்கிற தம்பி பத்தின ரொம்ப வித்யாசமான கதை தான் தோரணை.

அம்சம் மூணு : இளைய தளபதி விஜய்க்கு போட்டியா நம்ம புரட்சி தளபதி விஷால் அதிகபட்ச பஞ்ச் டயலாக் பேசி நடிச்ச படம் தான் இந்த தோரணை

அம்சம் நாலு : கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்த சில தமிழ் படங்கள்ல முக்கியமான எடத்த புடிச்ச படம் தான் தோரணை

அம்சம் அஞ்சு : கதையின் நடக்குற இடம் .இதுவேரைக்கும் எடுக்காத இடமான மதுரைல ஆரம்பிக்குது தோரணை

இப்போ படத்தோட கதைக்கு ( கர்மம் டா இந்த படத்துல கதை வேற இருக்கா ). சின்ன வயசுல தன்னோட அம்மா திட்டினாங்க அப்படின்ன்ற ஒரு காரணத்துக்காக ஊற விட்ட ஓடின அண்ணன நெனைச்சு அம்மா திடீர்னு ஒரு நாள் காலைல எழுந்த உடனே மனமுருகி நிக்குறாங்க. இத பாக்குற நம்ம ஹீரோ விஷால் உடனே தாயின் துயர் துடைக்க சென்னை போறாரு.
மதுரைல இருந்து சென்னைக்கு பஸ்ல வந்து கோயம்பேடுல இறங்குறாரு. அப்போ தான் ஒரு ட்விஸ்ட்தமிழ் சினிமா வோட விதி படி ஹீரோ எப்பவும் மதுரைல இருந்து தான் வரணும்,வந்து இறங்கின உடனே பஸ் ஸ்டாண்ட் லையே ஒரு மர்டர் நடக்கும். இங்கயும் நடக்குது. அப்புறம் இன்னொன்னு அது எப்படிங்க மதுரைல காணாம போன அத்தனை பேரு சென்னைக்கே வாரங்க
அது கூட பரவல்ல தேடி வரவங்களும் கரெக்டா சென்னைக்கே வருவாங்க என்னவோ போங்க.

சென்னைக்கு வந்த நம்ம ஹீரோ விஷால் இங்க ரெண்டு பொறிக்கி கும்பல் கிட்ட மாட்றாரு. அடடா யாரவது இது மாதிரி ஒரு தடவையாவது திங் பண்ணி இருக்காங்கள சொல்லுங்க.

அந்த ரெண்டு கும்பலையும் சமாளிச்சு,ஒரு பிகரையும் உஷார் பண்ணி, அண்ணனையும் கண்டுபுடிச்சு, தாயோட துயர் துடைச்சு, எப்படி நம்ம காதுல பூ சுத்துறாரு அப்படின்னு சொல்ல வர கருத்துள்ள படம் தான் தோரணை.

இந்த படத்தோட கதாநாயகிய பத்தி சொல்லலைன்னா நாக்கு இழுத்துக்கும். சும்மா சொல்ல கூடாது ஸ்ரேயா இந்த படத்துல " பிரமாதமா நடிசிருகாங்க ". விஷால் போட்ருக்க ஆடைகளுக்கே எழுவத்தி அஞ்சு லட்ச ரூபா தான் செலவாச்சாம் ஆனா ஸ்ரேயாவோட டிரஸ் ?? அவர் அணிந்த ஆடைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாயாம். வர வர கைக்குட்டை வேலையும் கண்ணா பின்னானு ஏறிடுச்சு போலருக்கு . சரி அத விடுங்க.

இப்போ படத்தோட வில்லனுங்களுக்கு வருவோம் பிரகாஷ் ராஜ் & பொல்லாதவன் கிஷோர் இந்த படத்துல வில்லன். கொடுத்த காசுக்கு மேலேயே ரெண்டு பெரும் கத்தி இருகாங்க சாரி நடிச்சிருக்காங்க. இந்த ரெண்டு பேர்ல யாரு நம்ம தளபதியோட அண்ணன் ன்னு கண்டுபிடிக்கிறது தான் படத்தின் கதை, ட்விஸ்ட் அப்படின்னு சொல்லலாம்.

கீதா தளபதியோட அம்மாவா நடிசிருகாங்க. படத்துல ஒதைகனும்னு நாம நெனைச்சா அந்த ஆள் வேற யாருமில்ல கீதா தான். ஏன்னா பய்யன காணோம்னு அவங்க பீல் பண்ணதால தான் தளபதி சென்னைக்கு வந்து அழிச்சாட்டியம் பண்றாரு. பொய் தொலையுது விடுங்க.

தனி பட்ட முறைல பு.தா ( புரட்சி தளபதி ) அவர் கிட்ட கேக்க வேண்டிய கேள்வி நெறைய இருக்குன்னாலும் கொஞ்சமா கேக்குறேன் .

உங்களுக்கு ஏன் இந்த வேல. நீங்கெல்லாம் சினிமால நடிக்கிலன்னு யார் அழுதா. ஏன் யா கொஞ்சம் நஞ்சம் கரெக்டா இருக்குற தமிழ் பட உலகத்த கேடுக்குறீங்க.
" நீ அடிச்சா பணம் நான் அடிச்ச பொநம் " இந்த மாதிரி பஞ்ச் டயலாக் ல உங்களுக்கு தேவையா. யார் சொல்லி நீங்க இதெல்லாம் செய்றீங்க. சண்டகோழி ஏதோ தெரியுமா ஓடிடுச்சு. அதுக்காக எல்லா படத்துலேயும் ஒரே மாதிரி நடிச்சு ஏன் எங்க கழுத அறுக்குறீங்க. சத்யம் படதுகப்புரமவது திருந்துவீங்கன்னு நெனைச்சோம், திருந்தல. மனசாட்சிய தொட்டு சொல்லுங்க உங்க படத்த நீங்க தனிய உக்காந்து பாபீங்களா. ஆனா நீங்க மனசாட்சிய குத்தி முர்டேர் பண்ணிட்டு நல்லா தானே இருக்குன்னு சொல்வீங்க. அப்படி சொல்லும்போது நீங்க தோரணய பக்கனும்ன்றது தான் என்னோட பணிவான வேண்டுகோள் .

சத்யம் தவறினதுகப்புரம் இந்த தோரணை பாக்குறவங்களுக்கு சோதனை மற்றும் வேதனை.

June 8, 2009

நன்றி உரைக்கு நன்றி உரை

நம்ம பாட்னர் இருக்காரே ரொம்ப விவரமானவர்,வித்யாசமானவர்,விவகாரமானவர். அவர் உதயசூரியனுக்கு வோட்டு போட்ட மக்களுக்கு நன்றி தெரிவிச்சு எழுதி இருக்காரே அத படிச்சாலே புரியும். கலைஞர் உடன் பிறப்புகளுக்கு முரசொலில எழுதுற கவிதை மாதிரி இருக்கு பாருங்க. அவர் மாதிரி கவிதை நடைல என்னால எழுத முடியலைன்னாலும் ஏதோ என்னால முடிஞ்சத எழுதுறேன்.

இந்த நாடாளுமன்ற தேர்தல்ல தோத்தவங்க பொதுவா சொன்ன காரணங்கள் என்னனு நாம கொஞ்சம் இப்போ பாக்கலாம்.
எந்த பட்டன அழுத்தினாலும் அதாவது இரட்டை இலைல அழுத்தினா அது நேர உதயசூரியன்ல வோட்டு பசிவாச்சு.

அப்புறம் பணத்தால எத வேணாலும் வாங்கிடலாம் ன்ற போக்கு. பணம் கொடுத்து வோட்டு போட வெச்சுட்டாங்க .

தேர்தல் நிர்வாகம் ஆளும் கட்சிய கவனிக்கல. தேர்தல் நிர்வாகத்தோட கண்காணிப்புல ஆளும் கட்சி ரோவ்டிசம் பண்ணாங்க.

இல்ல நான் தெரியாம தான் ஒன்னு கேக்குறேன் 2 பேரையும் ( வேற யாரு நம்ம அன்பு சகோதரியும்,டாக்டர் அண்ணனையும் தான். ). ஒரு தடவையாவது மக்கள் கொடுத்த தீர்ப்ப ஏத்துக்கறோம். தோல்விய ஒப்புகறோம், எதிரி கட்சியா இல்லாம ஒரு நல்ல எதிர் கட்சியா நாங்க செயல்படுவோம் அப்படின்ற நல்ல வார்த்தையெல்லாம் உங்க வாய்ல இருந்து உங்க வாழ் நாள்ல வரவே வராதா. எப்போ தான்யா நீங்கெல்லாம் திருந்துவீங்க.

எப்பவும் அரைச்ச மாவேயதான் அறைபீங்களா. முன்னாடி வாரிசு அரசியல்னு சொன்னீங்க. உங்க வாரிசுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தும் அமைதி ஆயிடீங்க. இன்னொருத்தார் எனக்கு குடும்பமே கிடையாது, வாரிசே கிடையாதுன்னு சொன்னாங்க. ஆனா வளர்ப்பு மகனுக்கு நூறு கோடில கல்யாணமாம் , எப்போ நாங்கெல்லாம் தெரு கோடில நிக்கும் போது. குடும்பே இல்லன்னு சொல்றீங்க ஆனா சிறுதாவூர் பங்களா, கொடனாடுல எஸ்டேட், யாருக்குங்க இதெல்லாம்.நீங்க சொல்ற விஷயமெல்லாம் உண்மையாகவே இருந்தாலும் அதையே சொல்லி சொல்லி மக்களுக்கு மத்தியில உங்க madhippe கேட்டு poidum polarukku . டாக்டர் அய்யா இருக்காரு பாருங்க அவர் தான் உலகத்துலேயே ஒழுகதுக்கு பிறந்தவர் மாதிரி பேசுவார். என் குடும்பத்தார் யாரவது கட்சி பதவியோ அரசு பதவியோ வகித்தால் என்ன சாட்டையால் அடிங்கன்னாறு. அப்போ அன்புமணி யாருக்கு பொறந்தாரு.இந்த விஷயத்த கேட்டா உங்க கட்சிய சேர்ந்த தீரன் இப்போ எங்க இருக்காரு. என்ன கொடும டொக்டர் அய்யா இது.

உங்களுக்கு ஆளும்கட்சி மேல கம்ப்ளைன்ட் பண்ண இன்னும் நெறைய ஐடியா இருக்கு நான் வேணா எனக்கு தெரிஞ்சத கொஞ்சம் சொல்றேன்

டிவி ல ஜெய டிவி யா வெச்ச அது நேரா கலைஞர் டிவி க்கு போயடுதுன்னு புகார் கொடுக்கலாம்.

புரட்சி தலைவிக்கு வர மெசேஜ் எல்லாம் அழகிரியோட செல்லுக்கு போகுதுன்னு சொல்லலாம்.

மத்திய அமைச்சர் ஆவதற்கு எம்.பீ தேர்தலில் ஜெயிக்க தேவ இல்லை என்ற சட்டம் கொண்டு வர சொல்லி ஆர்பாட்டம் செய்யலாம்.

வைகோ மெகா சீரியலில் நடிக்க செய்து அவரை அழ வைத்து அனுதாப அலையை உருவாக்கலாம்.

தைலாபுரம் தோட்டத்துல விளையுற அதன மம்பாழத்தையும் கலைஞர் அவர் ஆளுங்கள விட்டு ராவோடு ராவா ராவிட்டு போயட்ராருன்னு காமெடி பண்ணலாம்.

இன்னும் நெறைய இருக்கு ஆனா அதனையும் பிரியா கொடுக்க எனக்கு மனசில்ல.
இதனால நாங்க சொல்ல விரும்புரதுன்னு ஒன்னே ஒன்னு தான். திருந்துங்க மேலும் மேலும் மக்களை முட்டாள் ஆக்காதீங்க. நல்லதோ கேட்டதோ உண்மைய முதல்ல ஒதுகொங்க. நாற்பதுக்கு நாற்பதுன்னு ஜெயிச்சப்ப சந்தோஷமா இருந்துட்டு இப்போ அணி மாறினவுடனே அப்போ கூட்டணி ல இருந்ததால ஒன்னும் பண்ண முடில இப்போ சகோதரி சொன்ன வுடனே தான் புரிதுன்னு ஒரு உலக மகா உண்மைய சொன்னாரு பாருங்க பா. மா.க நிறுவனர் தலைவர் மருத்துவர் அய்யா அடடா அத மொதல்ல நிறுத்துங்க. தேர்தல் கமிஷனர் நரேஷ் குப்தவ மாடு மேய்க்க சொன்ன மாண்பு நம்ம டாக்டர் அய்யாவையே சேரும் . அவரு அறிவுள்ளவருங்க மாடு மேய்ச்ச கூட போழைசிபாறு ஆனா நீங்க இப்படி எல்லாரையும் குறை சொல்லிட்டே அன்பு சகோதரி கூட காலம் தள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவீங்க .

இந்த விஷயத்துல அன்பு சகோதரியும் கொஞ்சமும் சலைச்சவங்க இல்ல கலைஞர மூட்டை மாதிரி தூக்கிட்டு வராங்கன்னு சொன்னவங்க, தானே ஒரு மூட்ட மாதிரி தான் இருகொம்ன்ற விஷயத்த மறந்துட்டாங்க. யாருக்கும் உபயோகம் இல்லாத மண் மூட்டை.

பேச்சுல கொஞ்சமாவது நாகரீகத்த வலத்துகொஅங்க. உண்மைய பேச கத்துகோங்க. இனிமேலாவது வாழுற காலத்துல மனுஷ ஜென்மங்களா வாழ முயற்சி பண்ணுங்க. நீங்க கும்புட்ற அந்த கடவுள் உங்களுக்கு நல்ல புத்திய கொடுக்கட்டும்.
வாழ்க ஜனநாயகம்.....!

June 17, 2009

2011 இல் தமிழக முதல்வர் யாரு? அவருக்கு என்ன பேரு?

வணக்கம்,

இந்த கேள்வி ரொம்ப பேருக்கு ரொம்ப நாளா மனசுக்குள்ளயே கேட்டுட்டு இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.

60 வருஷமா அரசியல்ல இருக்க கலைஞர்ல இருந்து 6 மாசத்துக்கு முன்னாடி கட்சி ஆரம்பிச்ச கார்த்திக் வெரைக்கும்சொல்ற விஷயம் 2011 இல் நான் தான் தமிழக முதல்வர்.

எப்படி இவங்க எல்லாரும், எந்த அடிப்படைல இந்த விஷயத்த சொல்றாங்கன்னு தெரில. செரி நாம நம்ம விஷயத்துக்கு வருவோம். இப்படி 2011 இல் முதல்வர் நான் தான் சொல்ற கூட்டத்தோட இன்னொருத்தர் சேர போறாரு.

அவருக்கு அறிமுகம் ரொம்ப தேவ இல்ல. தமிழ் நாட்டுல இருக்குற மிக சிறந்த "நடிகர்கள்" அப்படின்னு ஒரு பட்டியல் போட்டா அதுல சார் பேர் தான் முதல் வரிசையில இருக்கும். நடிப்புல மர்லன் ப்ரண்டோவ மிஞ்சினவரு. ஸ்டைல் ல அழ பாசினோ வா மிஞ்சினவரு. அக்ஷன் ல அர்ணல்ட மிஞ்சினவருன்னு இப்படி பல பெற பின்னுக்கு தள்ளி இனிமே பின்னுக்கு தள்ள ஆளே இல்லாத ஒப்பற்ற நடிகர்.
அவர் ஏற்காத கதாபாத்திரங்களே கெடயாது.( தூ....) ,போடாத கெட் அப்பே இல்ல ( கர்மம்).தன்னோட பொறந்த நாளான ஜூன் 22 அம தேதி தனது அரசியல் பிரவேசத்த அறிவிக்கரத இருக்காரு. "நேற்றைய தொண்டன் இன்றைய தலைவன் இன்றைய தொண்டன் நாளைய தலைவன்" இப்படி ஒரு போன்மொழிய உதிர்த்த பொன்மன செம்மல்.

முன்னாடி என்னோட தலைவன் சூப்பர் ஸ்டார்னு சொல்லிட்டு திரிஞ்சாரு, இப்போ திடீர்னு எம்.ஜி.ஆர்ர். ஓட தீவிர ரசிகர தன்ன சித்தரிக்க விரும்புராறு.
அது எதுக்குன்னுதான் தெரில.

இவர் யாரு, இவ்ளோ உயர்ந்த பண்புகள் உள்ள இந்த பண்பாளன் யாரு அப்படின்ற கேள்வி உங்களுக்கு வரும்.பதில் இதோ. அவர் இதய தளபதி,இனிய தளபதி,இளைய தளபதி டாக்டர் விஜய்.

நடிப்புல பல சாதனைகள முறியடிசுட்டு இனிமே முறியடிக்க ஒரு சாதனை கூட இல்லாததால இப்போ அரசியல்ல எறங்கி மக்களுக்கு " சேவை " செய்யலாம்னு முடிவு எடுடுருக்காரு நம்ம நடிப்பு புயல். கடைசியா அவர் நடிச்ச 3 கலை காவியங்களான அழகிய தமிழ் மகன்,குருவி மற்றும் வில்லு ஆகிய படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றி பெற்றதால அவருக்கு என்ன கேரக்டர் இனிமே கொடுக்கலாம்னு தமிழ் திரை உலகமே தலை சுத்தி கீழே உழுந்து கெடக்குது.மணிரத்னம் , ஷங்கரெல்லாம் ஊற ஓடிட்டத கேள்வி. இப்போ வேட்டைக்காரன் அப்படின்னு ஒரு புதுமையான படத்தில நடிச்சிட்டு இருக்காரு.

இதெலாம் முடிச்ச பிறகு உங்க உண்மை தொண்டன். அஞ்சா நெஞ்சன், மக்களுக்காக அல்லும் பகலும் அயராது பாடு பட வருகிறார் வருகிறார் உங்கள் இளைய தளபதி.

இது நடிச்சு சேவை புரிஞ்சதுல அவர் அவ்ளோ சொத்து எதுவும் சேக்கலீங்க. என்ன வடபழனி பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல சஞ்சய் திருமண மண்டபமும், SSR பங்கஜம் திரை அரங்கு எதிர்ல ஷோபா கல்யாண மண்டபமும்அப்புறம் போருர்ல ஒன்னு, வடபழனில 2 வீடு. நீலாங்கரைல 2 வீடு icici பேங்க் ஷேர் நு அப்புறம் அவரோட " 200 நாள் ஓடின வெற்றி படங்களுக்கு " வாங்குற சம்பளம் இப்படி அவர் செர்த்துருக்க சொத்து ரொம்ப கம்மி. அதனாலேயே அவர் அரசியலுக்கு வரலாம்.

சின்ன வயசுலேர்ந்து ரொம்ப "கஷ்டப்பட்டு" வளர்ந்தவர்னு அவரே சொல்றாரு என்ன கஷ்ட பட்டாருன்றது அவருக்கு தான் வெளிச்சம்.சினிமா la நடிக்க வெக்க அவங்கப்பா ஒத்துகாததலா உதயம் திரியாரைங்கில் உண்ணாவிரதம் இருந்து சாதிச்சத பெருமையா குங்குமம் பத்திரிகைல பகிர்ந்துகிட்டாறு நம்ம இளைய தளபதி. அவ்ங்கப்பவ மொதல்ல அடிக்கணும் உண்ணாவிரதம் இருந்தப்ப அப்படியே போகட்டும்னு விடாம நடிக்க வெச்சு இப்போ பல பேரோட கழுத்த அருக்குராறு நம்ம டாக்டர்.

இப்போவே அவரோட தேர்தல் அறிகைலாம் பாக்க எங்களுக்கு பயங்கர ஆர்வமா இருக்குது. படத்துலலாம் எப்படி பஞ்ச் டயலாக் பேசுறாரு அதே மாதிரி மீட்டிங்ல பெசுவார்ல அத பாத்து கை கொட்டி சாரி கை தட்டி சிரிக்கலாம்ல. இன்னும் நாம என்னன்னா கொடுமையெல்லாம் அனுபவிக்கணும்னு இருக்குன்னு தெரிலையே.
பாப்போம் அதான் நம்ம தலைஎழுத்துனு இருந்தா யாரால மாத்த முடியும்.
கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிட்டு முடிச்சிடறேன்.

உழைத்திடு, உயர்ந்திடு, உன்னால் முடியும் இது நான் சொல்லங்க நம்ம தளபதியோட கொடில இதான் இருக்குது...

வாழ்க ஜனநாயகம்.....................

June 10, 2009

ரோதனை சாரி தோரணை

நம்ம புரட்சி தளபதி விஷால் நடிச்சு இப்போ வெளி வந்து " வெற்றிகரமா " "ஓடிட்டு " இருக்க தோரணை பத்தின சிறப்பு அம்சங்கல இப்போ நாம பாக்க போறோம் .

அம்சம் ஒன்னு : புரட்சி தளபதி பட்டத்த வாங்கின பிறகு வர மூணாவது படம் தோரணை.

அம்சம் ரெண்டு : காணாம போன அண்ணன இருவத்தி அஞ்சு வருஷம் கழிச்சு கண்டு பிடிக்கிற தம்பி பத்தின ரொம்ப வித்யாசமான கதை தான் தோரணை.

அம்சம் மூணு : இளைய தளபதி விஜய்க்கு போட்டியா நம்ம புரட்சி தளபதி விஷால் அதிகபட்ச பஞ்ச் டயலாக் பேசி நடிச்ச படம் தான் இந்த தோரணை

அம்சம் நாலு : கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்த சில தமிழ் படங்கள்ல முக்கியமான எடத்த புடிச்ச படம் தான் தோரணை

அம்சம் அஞ்சு : கதையின் நடக்குற இடம் .இதுவேரைக்கும் எடுக்காத இடமான மதுரைல ஆரம்பிக்குது தோரணை

இப்போ படத்தோட கதைக்கு ( கர்மம் டா இந்த படத்துல கதை வேற இருக்கா ). சின்ன வயசுல தன்னோட அம்மா திட்டினாங்க அப்படின்ன்ற ஒரு காரணத்துக்காக ஊற விட்ட ஓடின அண்ணன நெனைச்சு அம்மா திடீர்னு ஒரு நாள் காலைல எழுந்த உடனே மனமுருகி நிக்குறாங்க. இத பாக்குற நம்ம ஹீரோ விஷால் உடனே தாயின் துயர் துடைக்க சென்னை போறாரு.
மதுரைல இருந்து சென்னைக்கு பஸ்ல வந்து கோயம்பேடுல இறங்குறாரு. அப்போ தான் ஒரு ட்விஸ்ட்தமிழ் சினிமா வோட விதி படி ஹீரோ எப்பவும் மதுரைல இருந்து தான் வரணும்,வந்து இறங்கின உடனே பஸ் ஸ்டாண்ட் லையே ஒரு மர்டர் நடக்கும். இங்கயும் நடக்குது. அப்புறம் இன்னொன்னு அது எப்படிங்க மதுரைல காணாம போன அத்தனை பேரு சென்னைக்கே வாரங்க
அது கூட பரவல்ல தேடி வரவங்களும் கரெக்டா சென்னைக்கே வருவாங்க என்னவோ போங்க.

சென்னைக்கு வந்த நம்ம ஹீரோ விஷால் இங்க ரெண்டு பொறிக்கி கும்பல் கிட்ட மாட்றாரு. அடடா யாரவது இது மாதிரி ஒரு தடவையாவது திங் பண்ணி இருக்காங்கள சொல்லுங்க.

அந்த ரெண்டு கும்பலையும் சமாளிச்சு,ஒரு பிகரையும் உஷார் பண்ணி, அண்ணனையும் கண்டுபுடிச்சு, தாயோட துயர் துடைச்சு, எப்படி நம்ம காதுல பூ சுத்துறாரு அப்படின்னு சொல்ல வர கருத்துள்ள படம் தான் தோரணை.

இந்த படத்தோட கதாநாயகிய பத்தி சொல்லலைன்னா நாக்கு இழுத்துக்கும். சும்மா சொல்ல கூடாது ஸ்ரேயா இந்த படத்துல " பிரமாதமா நடிசிருகாங்க ". விஷால் போட்ருக்க ஆடைகளுக்கே எழுவத்தி அஞ்சு லட்ச ரூபா தான் செலவாச்சாம் ஆனா ஸ்ரேயாவோட டிரஸ் ?? அவர் அணிந்த ஆடைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாயாம். வர வர கைக்குட்டை வேலையும் கண்ணா பின்னானு ஏறிடுச்சு போலருக்கு . சரி அத விடுங்க.

இப்போ படத்தோட வில்லனுங்களுக்கு வருவோம் பிரகாஷ் ராஜ் & பொல்லாதவன் கிஷோர் இந்த படத்துல வில்லன். கொடுத்த காசுக்கு மேலேயே ரெண்டு பெரும் கத்தி இருகாங்க சாரி நடிச்சிருக்காங்க. இந்த ரெண்டு பேர்ல யாரு நம்ம தளபதியோட அண்ணன் ன்னு கண்டுபிடிக்கிறது தான் படத்தின் கதை, ட்விஸ்ட் அப்படின்னு சொல்லலாம்.

கீதா தளபதியோட அம்மாவா நடிசிருகாங்க. படத்துல ஒதைகனும்னு நாம நெனைச்சா அந்த ஆள் வேற யாருமில்ல கீதா தான். ஏன்னா பய்யன காணோம்னு அவங்க பீல் பண்ணதால தான் தளபதி சென்னைக்கு வந்து அழிச்சாட்டியம் பண்றாரு. பொய் தொலையுது விடுங்க.

தனி பட்ட முறைல பு.தா ( புரட்சி தளபதி ) அவர் கிட்ட கேக்க வேண்டிய கேள்வி நெறைய இருக்குன்னாலும் கொஞ்சமா கேக்குறேன் .

உங்களுக்கு ஏன் இந்த வேல. நீங்கெல்லாம் சினிமால நடிக்கிலன்னு யார் அழுதா. ஏன் யா கொஞ்சம் நஞ்சம் கரெக்டா இருக்குற தமிழ் பட உலகத்த கேடுக்குறீங்க.
" நீ அடிச்சா பணம் நான் அடிச்ச பொநம் " இந்த மாதிரி பஞ்ச் டயலாக் ல உங்களுக்கு தேவையா. யார் சொல்லி நீங்க இதெல்லாம் செய்றீங்க. சண்டகோழி ஏதோ தெரியுமா ஓடிடுச்சு. அதுக்காக எல்லா படத்துலேயும் ஒரே மாதிரி நடிச்சு ஏன் எங்க கழுத அறுக்குறீங்க. சத்யம் படதுகப்புரமவது திருந்துவீங்கன்னு நெனைச்சோம், திருந்தல. மனசாட்சிய தொட்டு சொல்லுங்க உங்க படத்த நீங்க தனிய உக்காந்து பாபீங்களா. ஆனா நீங்க மனசாட்சிய குத்தி முர்டேர் பண்ணிட்டு நல்லா தானே இருக்குன்னு சொல்வீங்க. அப்படி சொல்லும்போது நீங்க தோரணய பக்கனும்ன்றது தான் என்னோட பணிவான வேண்டுகோள் .

சத்யம் தவறினதுகப்புரம் இந்த தோரணை பாக்குறவங்களுக்கு சோதனை மற்றும் வேதனை.

June 8, 2009

நன்றி உரைக்கு நன்றி உரை

நம்ம பாட்னர் இருக்காரே ரொம்ப விவரமானவர்,வித்யாசமானவர்,விவகாரமானவர். அவர் உதயசூரியனுக்கு வோட்டு போட்ட மக்களுக்கு நன்றி தெரிவிச்சு எழுதி இருக்காரே அத படிச்சாலே புரியும். கலைஞர் உடன் பிறப்புகளுக்கு முரசொலில எழுதுற கவிதை மாதிரி இருக்கு பாருங்க. அவர் மாதிரி கவிதை நடைல என்னால எழுத முடியலைன்னாலும் ஏதோ என்னால முடிஞ்சத எழுதுறேன்.

இந்த நாடாளுமன்ற தேர்தல்ல தோத்தவங்க பொதுவா சொன்ன காரணங்கள் என்னனு நாம கொஞ்சம் இப்போ பாக்கலாம்.
எந்த பட்டன அழுத்தினாலும் அதாவது இரட்டை இலைல அழுத்தினா அது நேர உதயசூரியன்ல வோட்டு பசிவாச்சு.

அப்புறம் பணத்தால எத வேணாலும் வாங்கிடலாம் ன்ற போக்கு. பணம் கொடுத்து வோட்டு போட வெச்சுட்டாங்க .

தேர்தல் நிர்வாகம் ஆளும் கட்சிய கவனிக்கல. தேர்தல் நிர்வாகத்தோட கண்காணிப்புல ஆளும் கட்சி ரோவ்டிசம் பண்ணாங்க.

இல்ல நான் தெரியாம தான் ஒன்னு கேக்குறேன் 2 பேரையும் ( வேற யாரு நம்ம அன்பு சகோதரியும்,டாக்டர் அண்ணனையும் தான். ). ஒரு தடவையாவது மக்கள் கொடுத்த தீர்ப்ப ஏத்துக்கறோம். தோல்விய ஒப்புகறோம், எதிரி கட்சியா இல்லாம ஒரு நல்ல எதிர் கட்சியா நாங்க செயல்படுவோம் அப்படின்ற நல்ல வார்த்தையெல்லாம் உங்க வாய்ல இருந்து உங்க வாழ் நாள்ல வரவே வராதா. எப்போ தான்யா நீங்கெல்லாம் திருந்துவீங்க.

எப்பவும் அரைச்ச மாவேயதான் அறைபீங்களா. முன்னாடி வாரிசு அரசியல்னு சொன்னீங்க. உங்க வாரிசுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தும் அமைதி ஆயிடீங்க. இன்னொருத்தார் எனக்கு குடும்பமே கிடையாது, வாரிசே கிடையாதுன்னு சொன்னாங்க. ஆனா வளர்ப்பு மகனுக்கு நூறு கோடில கல்யாணமாம் , எப்போ நாங்கெல்லாம் தெரு கோடில நிக்கும் போது. குடும்பே இல்லன்னு சொல்றீங்க ஆனா சிறுதாவூர் பங்களா, கொடனாடுல எஸ்டேட், யாருக்குங்க இதெல்லாம்.நீங்க சொல்ற விஷயமெல்லாம் உண்மையாகவே இருந்தாலும் அதையே சொல்லி சொல்லி மக்களுக்கு மத்தியில உங்க madhippe கேட்டு poidum polarukku . டாக்டர் அய்யா இருக்காரு பாருங்க அவர் தான் உலகத்துலேயே ஒழுகதுக்கு பிறந்தவர் மாதிரி பேசுவார். என் குடும்பத்தார் யாரவது கட்சி பதவியோ அரசு பதவியோ வகித்தால் என்ன சாட்டையால் அடிங்கன்னாறு. அப்போ அன்புமணி யாருக்கு பொறந்தாரு.இந்த விஷயத்த கேட்டா உங்க கட்சிய சேர்ந்த தீரன் இப்போ எங்க இருக்காரு. என்ன கொடும டொக்டர் அய்யா இது.

உங்களுக்கு ஆளும்கட்சி மேல கம்ப்ளைன்ட் பண்ண இன்னும் நெறைய ஐடியா இருக்கு நான் வேணா எனக்கு தெரிஞ்சத கொஞ்சம் சொல்றேன்

டிவி ல ஜெய டிவி யா வெச்ச அது நேரா கலைஞர் டிவி க்கு போயடுதுன்னு புகார் கொடுக்கலாம்.

புரட்சி தலைவிக்கு வர மெசேஜ் எல்லாம் அழகிரியோட செல்லுக்கு போகுதுன்னு சொல்லலாம்.

மத்திய அமைச்சர் ஆவதற்கு எம்.பீ தேர்தலில் ஜெயிக்க தேவ இல்லை என்ற சட்டம் கொண்டு வர சொல்லி ஆர்பாட்டம் செய்யலாம்.

வைகோ மெகா சீரியலில் நடிக்க செய்து அவரை அழ வைத்து அனுதாப அலையை உருவாக்கலாம்.

தைலாபுரம் தோட்டத்துல விளையுற அதன மம்பாழத்தையும் கலைஞர் அவர் ஆளுங்கள விட்டு ராவோடு ராவா ராவிட்டு போயட்ராருன்னு காமெடி பண்ணலாம்.

இன்னும் நெறைய இருக்கு ஆனா அதனையும் பிரியா கொடுக்க எனக்கு மனசில்ல.
இதனால நாங்க சொல்ல விரும்புரதுன்னு ஒன்னே ஒன்னு தான். திருந்துங்க மேலும் மேலும் மக்களை முட்டாள் ஆக்காதீங்க. நல்லதோ கேட்டதோ உண்மைய முதல்ல ஒதுகொங்க. நாற்பதுக்கு நாற்பதுன்னு ஜெயிச்சப்ப சந்தோஷமா இருந்துட்டு இப்போ அணி மாறினவுடனே அப்போ கூட்டணி ல இருந்ததால ஒன்னும் பண்ண முடில இப்போ சகோதரி சொன்ன வுடனே தான் புரிதுன்னு ஒரு உலக மகா உண்மைய சொன்னாரு பாருங்க பா. மா.க நிறுவனர் தலைவர் மருத்துவர் அய்யா அடடா அத மொதல்ல நிறுத்துங்க. தேர்தல் கமிஷனர் நரேஷ் குப்தவ மாடு மேய்க்க சொன்ன மாண்பு நம்ம டாக்டர் அய்யாவையே சேரும் . அவரு அறிவுள்ளவருங்க மாடு மேய்ச்ச கூட போழைசிபாறு ஆனா நீங்க இப்படி எல்லாரையும் குறை சொல்லிட்டே அன்பு சகோதரி கூட காலம் தள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவீங்க .

இந்த விஷயத்துல அன்பு சகோதரியும் கொஞ்சமும் சலைச்சவங்க இல்ல கலைஞர மூட்டை மாதிரி தூக்கிட்டு வராங்கன்னு சொன்னவங்க, தானே ஒரு மூட்ட மாதிரி தான் இருகொம்ன்ற விஷயத்த மறந்துட்டாங்க. யாருக்கும் உபயோகம் இல்லாத மண் மூட்டை.

பேச்சுல கொஞ்சமாவது நாகரீகத்த வலத்துகொஅங்க. உண்மைய பேச கத்துகோங்க. இனிமேலாவது வாழுற காலத்துல மனுஷ ஜென்மங்களா வாழ முயற்சி பண்ணுங்க. நீங்க கும்புட்ற அந்த கடவுள் உங்களுக்கு நல்ல புத்திய கொடுக்கட்டும்.
வாழ்க ஜனநாயகம்.....!