August 13, 2009

சுதந்திர தினம்

இந்த பக்கம் வந்து கிட்ட தட்ட 2 மாசம் ஆகபோகுது. நல்ல மேட்டர் எதுவும் சிக்கலப்பா.... ( என்னமோ ஷங்கர் அவரோட எந்திரன் படத்துக்கு வசனம் எழுத கூப்ட மாதிரி தூ....). இப்போ கைவசம் 3, 4 மேட்டரோட வந்துருக்கோம்........

வடிவேலு வடை போச்சேன்னு சொல்ற மாதிரி இந்த வருஷம் சுதந்திர தினம் சனிக்கிழமை வந்து ஒரு லீவ் போச்சு....
வழக்கம் போல சனிகிழமைகள்ள `கோலா` கலமா கொண்டாடற மக்களுக்கு அதிர்ச்சி ஏன்னா அன்னைக்கு ஒயின் ஷாப் அத்தனயும் மூடி இருக்கும் .....

செரி விஷயத்துக்கு வருவோம் அப்படி இப்படின்னு சுதந்திரம் வாங்கிடோம்னு சொல்லி நாமளும் 62 வருஷத்த தள்ளிட்டோம்.
" உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஜனநாயகம் இன்னும் இருப்பதற்கு இந்தியாவே சிறந்த உதாரணம், வளர்ந்து வரும் நாடுகள்ல இந்தியா அதி வேகமா வளர்கிறது, இந்தியாவோட இறையான்மைக்கு சவால் விடுவோரை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம், எல்லையில் தீவிரவாதத்தில் ஈடுபடுவோரை பூண்டோடு நசுக்குவோம் னெல்லாம் நம்ம ஆளுங்க கேப்டனுக்கு சரிசமமா பஞ்ச் டயலாக் கேக்கலாம். இந்த 62 வருஷத்துல நாம இழந்தது என்ன , பெற்றது என்ன, வளர்ச்சி எதுல, வீழ்ச்சி எதுல இப்படி கொஞ்சம் நாம பாக்கலாம்.

வளர்ச்சி :
மக்களை தொகை :
நாம உலகதுக்க் எந்த விஷயத்துல சவால் விட்ரோமோ இல்லையோ, இந்த விஷயத்துல தைரியமா விடலாம். 1915 ல பாரதியார் 30 கோடி முகம் உடையால் நு எழுதினாரு, 1993 ல கௌண்டமணி அண்ணன் உன்ன மாதிரி நாட்ல 80 கோடி பேர் இருகாங்க, அவங்கள திருத்துறது என் வேல இல்லன்னாறு, 16 வருஷம் ஆச்சு இன்னும் நம்ம ஆளுங்க திருந்தல..இப்போ இது 110 ல வந்து நிக்குது...அது செரி கல்யாணம் முடிஞ்சு `அந்த நைட்` முடிஞ்சு வெளில வரும்போதே விசேஷம் எதுவும் உண்டான்னு கேக்குற வம்சத்த சேர்ந்த வர்க்கம் ஆச்சே நாமெல்லாம்.. அப்புறம் எப்படி மக்கள் தொகை வளராம போகும்..இப்போவே இருக்குற பஞ்சமெல்லாம் பத்தாம நம்ம ஆளுங்க ப்ன்ஜத்த எல்லாம் புதுசா கண்டு பிடிக்க ஆரம்பிச்சுடாங்க... பாத்து மக்களே இன்னும் ஜாஸ்தி ஆக்கிடாதீங்க...( நமக்கும் ஒரு கல்யாணத்த பண்ணினா நாம ஏன் இப்படி எல்லாம் அட்வைஸ் பண்ண போறோம் சொல்லுங்க...நமக்கு செட்டும் ஆகல வீட்லயும் பண்ணி வெக்க மாற்றாங்கப்பா )

வளர்ச்சி 2 சினிமா :
இதுல வளந்த மாதிரி நாம எதுலயும் வளரல, அந்த காலத்துல. மகாலிங்கம், சின்னப்பா, கிட்டப்பா, பாகவதர்நெல்லாம் இருந்தாங்க. அதுக்கப்புறம் சிவாஜி,எம்.ஜி.ஆர்,ரஜினி, கமல் எல்லாரும் நெறைய உழைச்சாங்க, நல்லா நடிச்சாங்க பேரும் புகழுமா 30,40 வருஷம் இருக்காங்க, ஆனா இப்போ வரவனுங்க....தாம்பரத்துல அடிச்சா தண்டயர்பேட்டைல போய் விழற மாதிரி பல `புரட்சிகள` இங்க சில `தளபதிகள்` இப்போ செஞ்சுட்டு இருக்காங்க. காதல்ங்குறது உணர்வு இல்ல வெறும் matter தான் சொல்ற மாதிரி இப்போ பல `காதல் கதை ` வருது. பாக்காத காதல்,கேக்காத காதல்,நாக்கறுத்த காதல், மூக்கறுத்த காதல் , போன், E-Mail இப்படி எத்தனையோ காதல் படங்கள், ஏன் காதலே இல்லாம காதல் பண்ற படங்கள்.....நடுவால நாங்க தான் OSCAR வாங்க போறோம்னு ஒரு குரூப் வேற கெளம்பும்..எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பாத்தா பு.............மூச்சு தான் வருது.....என்னவேனாலும் பண்ணலாம், எப்படி வேணும்னாலும் எடுக்கலாம் ( என்ன மாதிரி ஆளெல்லாம் இதெல்லாம் எழுதுறேன், அப்போ பாருங்க நெலமைய ) சுதந்திரத்தின் பயனை சினிமா உபயோகித்த விதம்.

வளர்ச்சி 3 அரசியல் :
சினிமாவுல கூட கொஞ்சம் குத்து மதிப்பா நடிச்சா போதும், நாமலே ஏதாவது தளபதி பட்டமோ சூரியன் பாடமோ கொடுத்துட்டு காலம் தள்ளலாம். ஆனா அரசியல்ல எல்லாமே தத்ரூபமா இருக்கனும். நடிப்பு, வசனம், செண்டிமெண்ட் இப்படி எல்லாமே, ஒன்னே ஒன்னுல ரொம்ப கவனமா இருக்கனும் அது டிரஸ். அப்படியே நல்லவன் மாதிரியே மூஞ்ச வெச்சுட்டு white & white ல உலா வரணும். அப்பதான் நீ அரசியல்வாதின்னே தெரியவரும் அதான் அரசியலுக்கான dress code. இது தவிர ஒரே நேரத்துல 10 பேற சமாளிக்கணும்,கதை சொல்ற திறமை இருக்கனும், நல்ல மெமரி இருக்கணும் இப்படி இன்னும் நெறைய விஷயம் irukku தொழில் ரகசியத்த வெளில சொல்ல முடியாது . நாம வளர்ச்சிய மட்டும் பாப்போம் .
daalmiyaapuramndra பெற கள்ளகுடின்னு மாத்த தண்டவாளத்துல தலைய கொடுக்க துணிஞ்ச நம்ம இப்போதைய முதல்வர் கலைஞ்சர், எங்கயோ இருந்த தமிழ் நாட்ட தன்னோட செயல் திட்டம் மூலமா முன்னுக்கு கொண்டு வந்த செயல் வீரர் காமராஜர், ஏழைகளின் துயர் துடைத்த எம்.ஜி.ஆர், அரசு மருத்துவமனைல கட்டில இல்லாததால தரைல படுத்த கக்கன் இப்படி நெறைய பேர் இருந்த காலம் போய் இப்போ 2 படத்துல நடிச்சதும் 3 வது படத்துலேயே அடுத்த முதல்வர் ஆயுட்றாங்க நெறைய பேர், கட்சியிலயோ அல்லது அமைகிற அரசுலயோ தன்னுடுய குடும்பத்தார் பதவி வகிக்க மாட்டங்க, அப்படி ஆச்சுன்னா என்ன சவுக்கால அடிங்கன்னாறு ஒருத்தரு,தாழ்த்தப்பட்டவர், சிறுபான்மை இனத்தவர் இவங்களோட முன்னேற்றத்துக்கு நம்முடைய கட்சி பாடு படும்னு july 16,1989 ,அன்னைக்கு கட்சி ஆரம்பிக்கும் போது சொன்னாரு ஒரு தலைவர், ஆனா இன்னிக்கு தன் மகனுக்கு எந்த அரசு மத்திய சுகாதார துறை அமைச்சர் கொடுக்குரான்களோ, தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுகிற கட்சிய அது வளந்துருக்கு. இப்போதைய அரசியலுக்கு இவரு ஒருத்தர் சிறந்த உதாரணம். சுதந்திரத முழுமையா உபயோக படுத்துறாரு. இது போக காமராஜர் ஆட்சி, Lap Top இல் செயல் திட்டங்கள், மக்களுடன் தான் கூட்டணி இப்படி சொல்லிட்டு இன்னும் இருங்காங்க. அவங்கள திருத்துறது நம்ம வேல இல்ல ........

கலை & இலக்கியம் :
திருக்குறள், இய்ம்பெருக்காப்பியம், அகநானுறு , புறநானுறு இப்படி நம்மாளுங்க உலகத்துக்கு ஏகப்பட்ட விஷயத்த சொன்னாலும் நம்மாளுங்க தேடி போய் வாங்குறது சரோஜா தேவி புக் தான் இங்கிலிஷ்ல சொன்னா Kushwanth Singhs COMPANY OF WOMEN ( நாங்களும் படிச்சிருக்கோம்). சுதந்திரத்துக்கு முன்னாடி நாமெல்லாம் அடிபட்டுகிட்டு இருந்த காலத்துலேயே நல்ல புக்ஸ்லாம் வந்துது எப்போ கேட்டுபோசுன்னே தெரில, இப்போ எந்த நடிகர் யார வெச்சுருக்காரு, யார் யாரெல்லாம் விவாகரத்துக்கு கேற்றுகாங்க, ராத்திரி பார் ல தண்ணி அடிச்சாங்களா , யார் யாரோட கள்ள தொடர்பு வேசுருகாங்கன்னு நாம தசாவதாரம் கமல் மாதிரி உலகளாவிய விஷயத்த தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வம் அயிடோம், என்ன மாதிரி ஒரு சில்லற பய்யன் கொடுக்குற இந்த மாதிரி ஒரு சின்ன உதாரணமே இவ்ளோ கேவலமா இருக்கே இன்னும் நாம பாக்க வேண்டிய விஷயம் எத்தன இருக்கு....வேணாம் சாமி.....இன்னும் அத்தனை குப்பையும் தோண்டினா விஷ வாயு தாக்கி நாம மூர்ச்சை ஆயுருவோம்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் நு பாடினது போய் இப்போ
எப்போ திருந்தும் இந்த மானிட மாக்கள் நு பாடி இருப்பாங்க நம்ம பெரியவங்க...

இதன இருந்தும் நாம நாம அன்றாட வேலையெல்லாம் செய்றோம், அவங்கள மாருன்னு சொல்றது பதிலா நாம மொதல்ல நம்மள மாத்திப்போம், தனி மனித ஒழுக்கத்தையும், கொஞ்சமா நேர்மயோடவும் இருப்போம் ( ரொம்ப ஓவரா போறேனோ, மன்னிச்சிருங்கப்பா ) .

வழக்கம் போல தீவிரவாத அச்சுறுத்தல், swine Flu இப்படி போன்ற ப்றேச்சனயோட தான் இந்த வருஷம் சுதந்திரதினம் வருது. நாம எப்பவும் போல லேட்டா எந்திருச்சு, TV ல ரோஜா படத்த பாக்க வேண்டியது தான்..

தமிழா தமிழா கண்கள் கலங்காதே......
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே....
வாழ்க ஜனநாயகம், வாழ்க சுதந்திரம்..
ஜெய் ஹிந்து..........

August 13, 2009

சுதந்திர தினம்

இந்த பக்கம் வந்து கிட்ட தட்ட 2 மாசம் ஆகபோகுது. நல்ல மேட்டர் எதுவும் சிக்கலப்பா.... ( என்னமோ ஷங்கர் அவரோட எந்திரன் படத்துக்கு வசனம் எழுத கூப்ட மாதிரி தூ....). இப்போ கைவசம் 3, 4 மேட்டரோட வந்துருக்கோம்........

வடிவேலு வடை போச்சேன்னு சொல்ற மாதிரி இந்த வருஷம் சுதந்திர தினம் சனிக்கிழமை வந்து ஒரு லீவ் போச்சு....
வழக்கம் போல சனிகிழமைகள்ள `கோலா` கலமா கொண்டாடற மக்களுக்கு அதிர்ச்சி ஏன்னா அன்னைக்கு ஒயின் ஷாப் அத்தனயும் மூடி இருக்கும் .....

செரி விஷயத்துக்கு வருவோம் அப்படி இப்படின்னு சுதந்திரம் வாங்கிடோம்னு சொல்லி நாமளும் 62 வருஷத்த தள்ளிட்டோம்.
" உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஜனநாயகம் இன்னும் இருப்பதற்கு இந்தியாவே சிறந்த உதாரணம், வளர்ந்து வரும் நாடுகள்ல இந்தியா அதி வேகமா வளர்கிறது, இந்தியாவோட இறையான்மைக்கு சவால் விடுவோரை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம், எல்லையில் தீவிரவாதத்தில் ஈடுபடுவோரை பூண்டோடு நசுக்குவோம் னெல்லாம் நம்ம ஆளுங்க கேப்டனுக்கு சரிசமமா பஞ்ச் டயலாக் கேக்கலாம். இந்த 62 வருஷத்துல நாம இழந்தது என்ன , பெற்றது என்ன, வளர்ச்சி எதுல, வீழ்ச்சி எதுல இப்படி கொஞ்சம் நாம பாக்கலாம்.

வளர்ச்சி :
மக்களை தொகை :
நாம உலகதுக்க் எந்த விஷயத்துல சவால் விட்ரோமோ இல்லையோ, இந்த விஷயத்துல தைரியமா விடலாம். 1915 ல பாரதியார் 30 கோடி முகம் உடையால் நு எழுதினாரு, 1993 ல கௌண்டமணி அண்ணன் உன்ன மாதிரி நாட்ல 80 கோடி பேர் இருகாங்க, அவங்கள திருத்துறது என் வேல இல்லன்னாறு, 16 வருஷம் ஆச்சு இன்னும் நம்ம ஆளுங்க திருந்தல..இப்போ இது 110 ல வந்து நிக்குது...அது செரி கல்யாணம் முடிஞ்சு `அந்த நைட்` முடிஞ்சு வெளில வரும்போதே விசேஷம் எதுவும் உண்டான்னு கேக்குற வம்சத்த சேர்ந்த வர்க்கம் ஆச்சே நாமெல்லாம்.. அப்புறம் எப்படி மக்கள் தொகை வளராம போகும்..இப்போவே இருக்குற பஞ்சமெல்லாம் பத்தாம நம்ம ஆளுங்க ப்ன்ஜத்த எல்லாம் புதுசா கண்டு பிடிக்க ஆரம்பிச்சுடாங்க... பாத்து மக்களே இன்னும் ஜாஸ்தி ஆக்கிடாதீங்க...( நமக்கும் ஒரு கல்யாணத்த பண்ணினா நாம ஏன் இப்படி எல்லாம் அட்வைஸ் பண்ண போறோம் சொல்லுங்க...நமக்கு செட்டும் ஆகல வீட்லயும் பண்ணி வெக்க மாற்றாங்கப்பா )

வளர்ச்சி 2 சினிமா :
இதுல வளந்த மாதிரி நாம எதுலயும் வளரல, அந்த காலத்துல. மகாலிங்கம், சின்னப்பா, கிட்டப்பா, பாகவதர்நெல்லாம் இருந்தாங்க. அதுக்கப்புறம் சிவாஜி,எம்.ஜி.ஆர்,ரஜினி, கமல் எல்லாரும் நெறைய உழைச்சாங்க, நல்லா நடிச்சாங்க பேரும் புகழுமா 30,40 வருஷம் இருக்காங்க, ஆனா இப்போ வரவனுங்க....தாம்பரத்துல அடிச்சா தண்டயர்பேட்டைல போய் விழற மாதிரி பல `புரட்சிகள` இங்க சில `தளபதிகள்` இப்போ செஞ்சுட்டு இருக்காங்க. காதல்ங்குறது உணர்வு இல்ல வெறும் matter தான் சொல்ற மாதிரி இப்போ பல `காதல் கதை ` வருது. பாக்காத காதல்,கேக்காத காதல்,நாக்கறுத்த காதல், மூக்கறுத்த காதல் , போன், E-Mail இப்படி எத்தனையோ காதல் படங்கள், ஏன் காதலே இல்லாம காதல் பண்ற படங்கள்.....நடுவால நாங்க தான் OSCAR வாங்க போறோம்னு ஒரு குரூப் வேற கெளம்பும்..எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பாத்தா பு.............மூச்சு தான் வருது.....என்னவேனாலும் பண்ணலாம், எப்படி வேணும்னாலும் எடுக்கலாம் ( என்ன மாதிரி ஆளெல்லாம் இதெல்லாம் எழுதுறேன், அப்போ பாருங்க நெலமைய ) சுதந்திரத்தின் பயனை சினிமா உபயோகித்த விதம்.

வளர்ச்சி 3 அரசியல் :
சினிமாவுல கூட கொஞ்சம் குத்து மதிப்பா நடிச்சா போதும், நாமலே ஏதாவது தளபதி பட்டமோ சூரியன் பாடமோ கொடுத்துட்டு காலம் தள்ளலாம். ஆனா அரசியல்ல எல்லாமே தத்ரூபமா இருக்கனும். நடிப்பு, வசனம், செண்டிமெண்ட் இப்படி எல்லாமே, ஒன்னே ஒன்னுல ரொம்ப கவனமா இருக்கனும் அது டிரஸ். அப்படியே நல்லவன் மாதிரியே மூஞ்ச வெச்சுட்டு white & white ல உலா வரணும். அப்பதான் நீ அரசியல்வாதின்னே தெரியவரும் அதான் அரசியலுக்கான dress code. இது தவிர ஒரே நேரத்துல 10 பேற சமாளிக்கணும்,கதை சொல்ற திறமை இருக்கனும், நல்ல மெமரி இருக்கணும் இப்படி இன்னும் நெறைய விஷயம் irukku தொழில் ரகசியத்த வெளில சொல்ல முடியாது . நாம வளர்ச்சிய மட்டும் பாப்போம் .
daalmiyaapuramndra பெற கள்ளகுடின்னு மாத்த தண்டவாளத்துல தலைய கொடுக்க துணிஞ்ச நம்ம இப்போதைய முதல்வர் கலைஞ்சர், எங்கயோ இருந்த தமிழ் நாட்ட தன்னோட செயல் திட்டம் மூலமா முன்னுக்கு கொண்டு வந்த செயல் வீரர் காமராஜர், ஏழைகளின் துயர் துடைத்த எம்.ஜி.ஆர், அரசு மருத்துவமனைல கட்டில இல்லாததால தரைல படுத்த கக்கன் இப்படி நெறைய பேர் இருந்த காலம் போய் இப்போ 2 படத்துல நடிச்சதும் 3 வது படத்துலேயே அடுத்த முதல்வர் ஆயுட்றாங்க நெறைய பேர், கட்சியிலயோ அல்லது அமைகிற அரசுலயோ தன்னுடுய குடும்பத்தார் பதவி வகிக்க மாட்டங்க, அப்படி ஆச்சுன்னா என்ன சவுக்கால அடிங்கன்னாறு ஒருத்தரு,தாழ்த்தப்பட்டவர், சிறுபான்மை இனத்தவர் இவங்களோட முன்னேற்றத்துக்கு நம்முடைய கட்சி பாடு படும்னு july 16,1989 ,அன்னைக்கு கட்சி ஆரம்பிக்கும் போது சொன்னாரு ஒரு தலைவர், ஆனா இன்னிக்கு தன் மகனுக்கு எந்த அரசு மத்திய சுகாதார துறை அமைச்சர் கொடுக்குரான்களோ, தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுகிற கட்சிய அது வளந்துருக்கு. இப்போதைய அரசியலுக்கு இவரு ஒருத்தர் சிறந்த உதாரணம். சுதந்திரத முழுமையா உபயோக படுத்துறாரு. இது போக காமராஜர் ஆட்சி, Lap Top இல் செயல் திட்டங்கள், மக்களுடன் தான் கூட்டணி இப்படி சொல்லிட்டு இன்னும் இருங்காங்க. அவங்கள திருத்துறது நம்ம வேல இல்ல ........

கலை & இலக்கியம் :
திருக்குறள், இய்ம்பெருக்காப்பியம், அகநானுறு , புறநானுறு இப்படி நம்மாளுங்க உலகத்துக்கு ஏகப்பட்ட விஷயத்த சொன்னாலும் நம்மாளுங்க தேடி போய் வாங்குறது சரோஜா தேவி புக் தான் இங்கிலிஷ்ல சொன்னா Kushwanth Singhs COMPANY OF WOMEN ( நாங்களும் படிச்சிருக்கோம்). சுதந்திரத்துக்கு முன்னாடி நாமெல்லாம் அடிபட்டுகிட்டு இருந்த காலத்துலேயே நல்ல புக்ஸ்லாம் வந்துது எப்போ கேட்டுபோசுன்னே தெரில, இப்போ எந்த நடிகர் யார வெச்சுருக்காரு, யார் யாரெல்லாம் விவாகரத்துக்கு கேற்றுகாங்க, ராத்திரி பார் ல தண்ணி அடிச்சாங்களா , யார் யாரோட கள்ள தொடர்பு வேசுருகாங்கன்னு நாம தசாவதாரம் கமல் மாதிரி உலகளாவிய விஷயத்த தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வம் அயிடோம், என்ன மாதிரி ஒரு சில்லற பய்யன் கொடுக்குற இந்த மாதிரி ஒரு சின்ன உதாரணமே இவ்ளோ கேவலமா இருக்கே இன்னும் நாம பாக்க வேண்டிய விஷயம் எத்தன இருக்கு....வேணாம் சாமி.....இன்னும் அத்தனை குப்பையும் தோண்டினா விஷ வாயு தாக்கி நாம மூர்ச்சை ஆயுருவோம்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் நு பாடினது போய் இப்போ
எப்போ திருந்தும் இந்த மானிட மாக்கள் நு பாடி இருப்பாங்க நம்ம பெரியவங்க...

இதன இருந்தும் நாம நாம அன்றாட வேலையெல்லாம் செய்றோம், அவங்கள மாருன்னு சொல்றது பதிலா நாம மொதல்ல நம்மள மாத்திப்போம், தனி மனித ஒழுக்கத்தையும், கொஞ்சமா நேர்மயோடவும் இருப்போம் ( ரொம்ப ஓவரா போறேனோ, மன்னிச்சிருங்கப்பா ) .

வழக்கம் போல தீவிரவாத அச்சுறுத்தல், swine Flu இப்படி போன்ற ப்றேச்சனயோட தான் இந்த வருஷம் சுதந்திரதினம் வருது. நாம எப்பவும் போல லேட்டா எந்திருச்சு, TV ல ரோஜா படத்த பாக்க வேண்டியது தான்..

தமிழா தமிழா கண்கள் கலங்காதே......
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே....
வாழ்க ஜனநாயகம், வாழ்க சுதந்திரம்..
ஜெய் ஹிந்து..........